தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை என்பதுபோல மாய தோற்றத்தை உருவாக்க சிலர் முயற்சி - கோவையில் அமைச்சர் மனோதங்கராஜ்

2030க்குள் தமிழகத்தின் பொருளாதாரம் ஒரு ட்ரில்லியனை எட்ட முடிவு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணிகளை செய்து வருவதாக அமைச்சர் மனோதங்கராஜ் தகவல்.


கோவை: கோவை மாவட்டம் நவஇந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார்.



இந்த நிகழ்ச்சிக்கு பின் அமைச்சர் மனோ தங்கராஜ், செய்தியாளர்களிடம் பேசியதாவது, 2030ஆம் ஆண்டிற்குள் தமிழகத்தின் பொருளாதாரம் ஒரு ட்ரில்லியனை எட்ட வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுத்துள்ளார்.

கோவை மாநகரம் மிகச்சிறந்த வளர்ச்சி நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்திற்கு சார்டட் அக்கவுண்ட்ஸ் (Charted Accounts) தேவை உள்ளது. தமிழகத்தில் ஒரு சிலர் சட்டம் ஒழுங்கு பிரச்சனை உள்ளது போன்று மாயத் தோற்றத்தை உருவாக்கும் முயற்சி மேற்கொள்கிறார்கள் அது தோற்றுப் போகும்.

கோவை மாவட்டத்தில் மக்கள் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழக முதல்வர் "நான் முதல்வன்" திட்டத்தை அறிமுகப்படுத்தி திறன் மேம்பாட்டிற்கு முக்கிய கவனத்தை செலுத்தி வருகிறார். பிற நாடுகள் பிற மாநிலங்களை ஒப்பிடும் பொழுது தமிழகத்தில் உள்ள மின் கட்டணம் நியாயமான மின் கட்டணம் தான்.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...