குன்னூரில் குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிறுத்தைகள் - வனத்துறை நடவடிக்கை எடுக்க வலுக்கும் கோரிக்கை

கடந்த சில தினங்களுக்கு முன்பு குன்னூர் அம்பிகாபுரம் குடியிருப்பு பகுதியில் இரு சிறுத்தைகள் நடமாடும் சிசிடிவி காட்சிகள் வெளிவந்த நிலையில், தற்போது மீண்டும் சிறுத்தை நடமாட்டம் கேமராவில் பதிவாகியுள்ளது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள அம்பிகாபுரம் குடியிருப்பு பகுதி மக்கள் மீண்டும் சிறுத்தை நடமாட்டத்தால் அச்சத்தில் உறைந்துள்ளனர்.



கடந்த செப்டம்பர் மாதம் அம்பிகாபுரம் குடியிருப்பு பகுதியில் இரண்டு சிறுத்தைகள் தெருக்களில் உலா வரும் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.

இரவு நேரங்களில் வளர்ப்பு நாய்களை வேட்டையாட இந்த சிறுத்தைகள் வந்ததாக கூறப்பட்ட நிலையில், சில தினங்களாக அப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் இல்லாததால் அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.



இந்நிலையில், நேற்றிரவு மீண்டும் அம்பிகாபுரம் குடியிருப்பு பகுதியில் இரண்டு சிறுத்தைகள் சர்வ சாதாரணமாக தெருக்களில் உலா வந்தது, அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

இதனால் அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்கள், இம்முறை சிறுத்தைகளை வனத்துறையினர் கண்காணித்து அதனை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேன்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...