கோவையில் முன்னாள் அதிமுக அமைச்சர்களை தெரியும் எனக்கூறி விஏஒ வேலை வாங்கி தருவதாக ரூ.2.17 கோடி மோசடி - ஒருவர் கைது

கோவையில் முன்னாள் அதிமுக அமைச்சர்களை தெரியும் எனக்கூறி 68 பேரிடம் சுமார் 2.17 கோடி ரூபாய் மோசடி செய்த ஆத்மா சிவக்குமாரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவையை சேர்ந்தவர் ஆத்மா சிவக்குமார். முதலில் அதிமுகவில் இருந்த இவர் , தற்போது, வ.உ.சி பேரவையின் ஓருங்கிணைப்பாளராக இருந்து வருகின்றார்.

இவர் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், ஆர்.பி. உதயகுமார் ,எஸ்.பி. வேலுமணி ஆகியோரை தனக்குத் தெரியும் எனக்கூறி வந்துள்ளார். இந்நிலையில், தான், கிராம நிர்வாக அலுவலர் பணி உள்ளிட்ட பல்வேறு அரசு வேலைகளை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றுவந்ததாக கூறப்படுகிறது.

அவரது பேச்சை நம்பி இதுவரை கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த 68 பேர் ஆத்மா சிவக்குமாரிடம் ரூ.2.17 கோடி வரை கொடுத்துள்ளனர். பணத்தை பெற்றுக் கொண்ட ஆத்மா சிவக்குமார், வேலையும் வாங்கி தராமல் பணத்தை திரும்ப தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

இந்நிலையில் இவரிடம் ரூ.8.20 லட்சம் பணம் கொடுத்த மாரிச்சாமி என்பவர் காவல் நிலையத்தில், புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் ஆத்மா சிவக்குமார், அவரது மனைவி சத்யபாமா, ஜெய்கிருஷ்ணன் மற்றும் மணிகண்டன் ஆகியோர் மீது கோவை குற்றபிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனையடுத்து வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த குற்றப்பிரிவு போலீசார், ஆத்மா சிவக்குமாரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றவர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...