மேட்டுப்பாளையம் குடிநீர் வழங்கக் கோரி மேல்முடுதுறை மக்கள் ஆட்சியரிடம் மனு


குடிநீர் இன்றி மிகுந்த சிரமப்படுவதாகவும், உடனடியாக மேட்டுப்பாளையம் குடிநீர் வழங்கக் கோரியும் மேல்முடுதுறை மக்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



இதுகுறித்து அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

மேல்முடுதுறை பகுதியில் சுமார் 15 குடும்பங்கள் கடந்த 10 வருடத்திற்கும் மேல் வசித்து வருகிறோம். எங்களுக்கு பஞ்சாயத்து துறையின் மூலம் நிலத்தடி நீர் அமைத்து தண்ணீர் வசதி செய்து தரப்பட்டுள்ளது. ஆனால், அந்த நிலத்தடி ஆழ்குழாய் கிணற்றில் இருந்து தண்ணீர் முழுமையாக தடைபட்ட காரணத்தாலும், மோட்டார் பழுதடைத்துள்ளதாலும் கடந்த 5 மாதங்களாக தண்ணீருக்கு மிகுந்த சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.

தண்ணீருக்காக பக்கத்து ஊர்களான கவுண்டம்பாளையம், காரணூர், கனுவக்கறை போன்ற ஊர்களுக்கு சென்று தண்ணீர் கொண்டு வருகிறோம். 

இப்பிரச்சனை குறித்து முடுதுறை செயல்அலுவலர், காரமடை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர், செயற்பொறியாளர், மேட்டுப்பாளையம் குடிநீர் வடிகால்வாரியம் உள்ளிட்ட அலுவலகங்களுக்கு மனு அளித்தும் பயனில்லை.

மேலும், எங்கள் ஊரிலேயே 1 லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள தரைமட்ட ஆற்று நீர் தேக்கத்தொட்டியும் நீர் ஊற்று நிலையமும் அமைத்து பக்கத்து ஊர்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இவ்வளவு பெரிய நீர்தேக்கத் தொட்டி இருந்தும் எங்கள் பகுதிக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. 

எனவே, மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு எங்கள் பகுதி மக்கள் பயனடையும் வகையில் குடிநீருக்கு ஏற்பாடு செய்து தர வேண்டும்" என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...