சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்றும் கல்விக் கடன்கள் குறைந்த வட்டியில் வழங்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Coimbatore:

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையின மக்களின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு குறைந்த வட்டி கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதன்படி தனிநபர் கடன், சுயஉதவிக்குழு கடன், விராசாத் கைவினை கலைஞர் கடன் மற்றும் கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. திட்டம்-1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராம மற்றும் நகர்ப்புறங்களில் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். திட்டம்-2-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் வரை இருக்கலாம்.

திட்டம்-1-ன் கீழ் தனிநபர் கடனாக அதிகபட்சம் ரூ.20 லட்சம் வரை ஆண்டுக்கு 6 சதவீத வட்டியில் வழங்கப்படுகிறது. திட்டம்-2-ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதமும், பெண்களுக்கு 6 சதவீதமும் வட்டியில் அதிகபட்சம் ரூ.30 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.

கைவினை கலைஞர்களுக்கான விராசாத் திட்டத்தின் கீழ் ஆண்களுக்கு 5 சதவீதமும், பெண்களுக்கு 4 சதவீதமும் வட்டியில் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.

மூலப்பொருட்கள், கருவிகள் மற்றும் இயந்திரங்கள் வாங்குவதற்கு இக்கடன் பயன்படுத்தப்படலாம்.

சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு திட்டம்-1-ன் கீழ் நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் வரை ஆண்டுக்கு 7 சதவீத வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. திட்டம்-2-ன் கீழ் ஆண்களுக்கு 10 சதவீதமும், பெண்களுக்கு 8 சதவீதமும் வட்டியில் நபர் ஒருவருக்கு ரூ.1.5 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.

சிறுபான்மையின மாணவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இளங்கலை, முதுகலை, தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்வதற்காக கல்விக் கடனும் வழங்கப்படுகிறது. திட்டம்-1-ன் கீழ் ரூ.20 லட்சம் வரை 3 சதவீத வட்டியிலும், திட்டம்-2-ன் கீழ் மாணவர்களுக்கு 8 சதவீதமும், மாணவியர்களுக்கு 5 சதவீதமும் வட்டியில் ரூ.30 லட்சம் வரை கல்விக் கடன் வழங்கப்படுகிறது.

கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சியர்கள் மற்றும் ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த சிறுபான்மையின மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம், மாவட்ட கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகங்களில் விண்ணப்பங்களை பெற்று சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

தனிநபர் கடன், சுயஉதவிக்குழு கடன் மற்றும் கைவினை கலைஞர் கடன்களுக்கு சிறுபான்மையினர் மதச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ், வருமானச் சான்றிதழ், குடும்ப அட்டை அல்லது இருப்பிடச் சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் தேவையான பிற ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும்.

கல்விக் கடனுக்கு மதச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ், வருமானச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, உண்மைச் சான்றிதழ், கல்விக் கட்டண ரசீது மற்றும் மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...