தீபாவளி பலகார சீட்டு நடத்தி வட்டிக்கு விட்ட பணம் திருப்பி கிடைக்காததால் விரக்தி - கோவையில் தாய்,மகள் தற்கொலை செய்த சோகம்

சூலூரில் தீபாவளி பலகார சீட்டு நடத்தி வட்டிக்கு விட்ட பணம் திரும்பி கிடைக்காத விரக்தியில் தாய்,மகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில், தந்தை ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


கோவை: சூலூர் அருகே உள்ள அம்மாள் கோவில் பிள்ளையார் தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் காந்தரூபன்.ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த அவர் தான் ஏற்கனவே வசித்த பகுதியில் தீபாவளி சீட்டு நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தீபாவளிக்கு நடத்திய சீட்டில் கிடைக்க பெற்ற பணத்தை காந்தரூபனின் மனைவி பழனியம்மாள் வட்டிக்கு விட்டதாக கூறப்படுகிறது. அந்த பணம் தீபாவளி சமயத்தில் திரும்ப கிடைக்காத காரணத்தினால் சீட்டு போட்ட அனைவரும் பணத்தை திரும்ப கேட்டுள்ளனர்.

இதனால் மனவேதனையில் மூவரும் இருந்ததாக கூறப்படுகிறது.பணம் கொடுத்தவர்கள் திரும்ப கேட்டுக் நச்சரித்து வந்ததால், விரக்தி அடைந்த காந்தரூபன் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.



இதில் மனைவி, மகள் பரிதாபமாக உயிரிழக்க, காந்தரூபன் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.



தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...