காதலர் தினத்தை கண்டித்தும் கோவை குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு நினைவுத் தூண் கோரியும் பாரத் சேனா அமைப்பு ஆட்சியரிடம் மனு


கோவை குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு நினைவுத் தூண் வைக்கக் கோரியும், காதலர் தினத்தைக் கண்டித்தும் மற்றும் அயல்நாட்டு குளிர்பானத்தை தடைசெய்யக் கோரியும் பாரத் சேனா அமைப்பின் சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

கோவையில் கடந்த 1998 பிப்ரவரி 14ம் தேதியன்று கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு பயங்கரவாதிகள் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் அப்பாவி மக்கள் 58 பேர் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவம் நடைபெற்று தற்போது 19 ஆண்டுகள் ஆவதால் அவர்களுக்கு தமிழக அரசின் சார்பாக கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள டி.பி.சாலையில் நினைவுத் தூண் அமைக்க கோவை மாவட்ட ஆட்சியர் தமிழக அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், அம்மனுவில் பிப்ரவரி 14ம் தேதியன்று காதலர் தினம் என்ற போர்வையில் நடக்கும் கலாச்சார சீர்கேடுகளை தடுக்க வேண்டும் என்றும் பாரத் சேனா சார்பில் வழங்கப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதைத்தொடர்ந்து, பாரத் சேனா கோவை மாவட்டத் தலைவர் எஸ்.பாண்டி, மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் அயல்நாட்டு குளிர்பானங்கள் மற்றும் அயல்நாட்டுப் பொருட்களை விற்பனை செய்வதை தடைசெய்யக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...