கோவை ஆவாரம்பாளையம் பெட்ரோல் பங்கில் தண்ணீர் கலந்த பெட்ரோல் விநியோகம் செய்துள்ளதாக டாக்ஸி டிரைவர் புகார்

ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோலுக்கு பதிலாக தண்ணீர் நிரப்பியுள்ளதாக சித்தா புதூர் பகுதியைச் ரமேஷ் என்பவர் அளித்த புகாரின் பெயரில் போலிஸார் டாக்ஸி டிரைவர் மற்றும் பங்கு நிர்வாகத்திடம் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.


கோவை: கோவை சித்தா புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவர் கார் டாக்ஸி ஓட்டி வருகிறார். இவரிடம் ரமேஷ் என்பவர் ஓட்டுனராக பணி புரிந்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று காலை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் தனது வாகனத்திற்க்கு 39.90 லிட்டர் அளவில் 4,119 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பி உள்ளார். அதன் பின்னர் ஆவாரம்பாளையம் பகுதியில் செல்லும் பொழுது அவரது வாகனம் பாதி வழியில் நின்று உள்ளது.

அங்கிருந்த கார் மெக்கானிக்கை அழைத்துக் கொண்டு காரை சோதித்த போது பெட்ரோல் டேங்கில் தண்ணீர் இருந்துள்ளது. இதனை பார்த்த ஓட்டுநர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உடனடியாக பெட்ரோல் பங்குக்கு விரைந்து சென்று பெட்ரோலுக்கு பதிலாக தண்ணீர் இருந்து உள்ளதாக தெரிவித்து உள்ளார். ஆனால் பெட்ரோல் பங்க் நிர்வாகிகள் அதற்கு சரியான பதிலை தரவில்லை என்று கூறப்படுகின்றது.

இந்த நிலையிலே ரமேஷ் கோவை காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பெயரில் இது குறித்து போலிஸார் டாக்ஸி டிரைவர் மற்றும் பங்கு நிர்வாகத்திடம் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....