கோவை அருகே கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - ஆட்டோ ஓட்டுநர் கைது

கோவை போத்தனூர் அருகே ஆட்டோவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், கடத்த முயன்றவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: கோவையில் மலிவு விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதனை கேரளாவிற்கு சிலர் கடத்தி விற்பனை செய்து வருகின்றனர். ரேசன் அரிசி பதுக்கல் மற்றும் கடத்தலை தடுக்க குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வு போலீசார் தனிப்படை அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவை போத்தனூர் அருகே ரேசன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து பறக்கும் படை தனி வட்டாச்சியர் முத்துக்குமார், மற்றும் குடிமைபொருள் குற்றப்புலனாய்வு ஆய்வாளர் விவேகானந்தன் தலைமையில் போலீசார் போத்தனூர் குருசாமிபிள்ளை வீதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த டாடா ஏஸ் ஆட்டோவை சோதனை செய்த போது அதில் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அரசி மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார் ஆட்டோ ஓட்டுநரான சிவதாஸ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...