கோவை பெரிய கடை வீதியில் தீபத்திருவிழா கண்காட்சி மற்றும்‌ விற்பனை தொடக்கம் - டிச.10 வரை நடைபெறும் என அறிவிப்பு

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு கோவை பெரிய கடை வீதியில் பல்வேறு வகைகளான விளக்குகளின் கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கியுள்ளது.


கோவை: பூம்புகார்‌ என்ற பெயரால்‌ அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு நிறுவனமான, தமிழ்நாடு கைத்திறத்‌ தொழில்கள்‌ வளர்ச்சிக்கழகம், கைவினைப்பொருட்கள்‌ உலகில்‌ தனியதொரு இடத்தைப்பிடித்துள்ளது. தொன்மையான கலைகளை பாதுகாப்பதோடு கைவினைஞர்களின்‌ வாழ்கைத்தரத்தை மேம்படுத்தவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும்‌ பண்டிகைக்காலங்களில்‌ பல கண்காட்சிகளை நடத்தி வருவதைப்போல இந்த ஆண்டும்‌ தீபத்திருவிழா கண்காட்சி மற்றும்‌ விற்பனை கோவை பெரிய கடை வீதியில் உள்ள பூம்புகார்‌ விற்பனை நிலையத்தில் தொடங்கியுள்ளது.



இக்கண்காட்சியினை கோவை Ananya குழுமத்தின் இணை மேலாண்மை இயக்குநர்‌ டாக்டர். உமா மகேஸ்வரி யுவராஜ்‌, குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.



வரும் டிசம்பர் 10 ஆம் தேதி வரை தினசரி காலை 10.00 மணி முதல்‌ இரவு 8.00 மணி கண்காட்சி நடைபெற உள்ளது.



தீபத்திருவிழா கண்காட்சியில்‌ பாலாடை விளக்கு, விஷ்ணு விளக்கு, கஜலட்சுமி விளக்கு, கணபதி விளக்கு, ரங்கநாதர்‌ விளக்கு, மூகாம்பிகை விளக்கு, அருணாச்சலேஸ்ர்‌ விளக்கு, பகவதி அம்மன்‌ விளக்கு, பாலாஜி விளக்கு, கிளி விளக்கு, அன்னம்‌ விளக்கு, கிளை விளக்கு, தொங்கு விளக்கு, மலபார்‌ விளக்கு, நந்தா விளக்கு, குபேர விளக்கு ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.



மேலும் பித்தளை மற்றும்‌ மண்‌ அகல்‌ விளக்கு, பாவை விளக்கு, யானை விளக்கு, சிலுவை விளக்கு, சங்கு சக்கர விளக்கு, மங்கள விளக்கு, பிரபை விளக்கு, தேவியார்‌ விளக்கு, கண்ணாடி விளக்கு, தாமரை விளக்கு, உருளி விளக்கு, இலை விளக்கு, தாண்டா மணி விளக்கு, கும்ப தீபம்‌, மாட விளக்கு, பஞ்சபூத விளக்கு, அடுக்கு தீபம்‌, அஷ்டோத்தர விளக்கு, ரத தீபம்‌, கேரளா பேன்சி விளக்கு, சக்கரத்‌ காழ்வார்‌ விளக்கு, ஐய்யப்பன்‌ விளக்கு, ஆமை தீபம்‌, நகாஸ்‌ வேளைப்பாடு விளக்கு, மாவு கல்‌ விளக்கு, மூலிகை சங்கு தீபம்‌ உள்ளிட்ட ஏராளமான விளக்குகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.



இக்கண்காட்சியில்‌ விற்பனை செய்யப்படும்‌ அனைத்து விளக்குகளுக்கும்‌ 10% சதவிகிதம்‌ சிறப்புத்தள்ளுபடி வழங்கப்படுகிறது.



அனைத்து கடன்‌ அட்டைகளும்‌ எவ்வித சேவைக்கட்டணமுமின்றி ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி புதிய ஆணையாளர் கட்டா ரவி தேஜாவை வாழ்த்திய மேயர்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா IAS இன்று பொறுப்பேற்றார். மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன்...

உலகப் புகையிலை ஒழிப்பு தினம்: கோவையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி

உலகப் புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை ராயல் கேர் நர்சிங் கல்லூரியில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் CSW...

உலக புகையிலை எதிர்ப்பு தினம்: ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ மற்றும் சுமதி மருத்துவமனை இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பெரியநாயக...

சூலூர் சிறுமி வழக்கு: குற்றவாளிகளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான கார்த்திக், மோகன்ராஜை மூன்று நாட்கள் காவல...

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...