கோத்தகிரி அருகே உள்ள கக்குச்சி கிராமத்தில் நடைபெற்ற வன திருவிழாவில் 2022 மரக்கன்றுகள் நடப்பட்டன

கக்குச்சி கிராமத்தில் நடைபெற்ற வனத்திருவிழாவில் வனத்திறை அமைச்சர் ராமசந்திரன் பங்கேற்றார் . மேலும், வனத்திருவிழாவை சிறப்பிக்கு வகையில் பள்ளிக் குழந்தைகள் பங்கேற்ற விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் இயற்கை வளத்தைக் காக்கும் வகையில் நாக்குபெட்டா அமைப்பின் சார்பில் கோத்தகிரி அருகே உள்ள கக்குச்சி கிராமத்தில் மரக் கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சிக்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை வகித்தார். நாக்குபெட்டா அமைப்பின் நிறுவனர் ராமகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார்.



இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், ஜெயபிரகாஷ் பெள்ளி, இந்திய நிலக்கரி கழக இயக்குநர் மற்றும் இந்திய தேயிலை வாரிய உறுப்பினருமான ராஜேஷ் சந்தர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.



இந்நிகழ்ச்சியில் கக்குச்சி கிராமப் பகுதிகள் மற்றும் பள்ளி வளாகம் உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 2022 சோலை மர நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டன. தொடர்ந்து நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது.



இப்பேரணியில் பள்ளிக் குழந்தைகள் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இறுதியாக படுகர் இன மக்கள் ஒன்றாககூடி தங்களது கலாச்சார நடனமாடி மகிழ்ந்தனர். இதில் கிராம மக்கள், அரசுத் துறை அலுவலர்கள், நாக்குபெட்டா அமைப்பின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...