கோவை தெலுங்குபாளையம் அருகே பேருந்தில் நீதிமன்ற பெண் ஊழியரிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட திருச்சி பெண் கைது..!

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற அலுவலக பெண் பணியாளர் ஹேமலதாவிடம் ஓடும் பேருந்தில், 5.5 சவரன் தங்க நகையை பறிக்க முயன்ற திருச்சியை சேர்ந்த பெண்ணை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


கோவை: கோவை மாவட்டம் தெலுங்குபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஹேமலதா (40). இவர் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்றைய தினம் வழக்கம் போல பணி முடிந்து ஹேமலதா தனியார் பேருந்தில் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது பேருந்து குப்புசாமிநாயுடு மருத்துவமனை நிறுத்தம் அருகே வந்த போது பேருந்தில் வந்த மற்றொரு பெண் திடீரென ஹேமலதா அணிந்திருந்த 5.5 சவரன் செயினை பறித்துக கொண்டு தப்பிச்செல்ல முயன்றுள்ளார்.

இந்நிலையில், ஹேமலதா சத்தம் போடவே, அங்கிருந்த பொதுமக்கள் அந்த பெண்ணை மடக்கி பிடித்து பந்தைய சாலை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.



இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட பெண் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த கவுரி என்பதும், இவர் குழுவாக செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

மேலும் இந்த பெண் பல்வேறு பெயர்களில் சுற்றித் திரிந்ததோடு இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஓடும் பேருந்தில் நீதிமன்ற பெண் ஊழியரின் தங்க நகையை மற்றொரு பறித்துக் கொண்டு தப்பிச்செல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...