கோவையில் நடைபெற்று வரும் சாலைப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆய்வு செய்தார்

சாலைக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும்‌, மாநகராட்சி மூலம்‌ இணைப்புச்‌ சாலைகள்‌ ஏற்படுத்த மதிப்பீடுகள்‌ தயாரிக்கவும் அதிகாரிகளுக்கு ஆணையாளர் பிரதாப் அறிவுறுத்தினார்.


கோவை: கோவை மத்திய மண்டலத்திற்குட்பட்ட சுங்கத்தில்‌ இருந்து உக்கடம்‌ வரை செல்லும்‌ புறவழிச்சாலை பகுதியில்‌ தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும்‌ மாநில நெடுஞ்சாலைத்துறையால் மேற்கொள்ளப்படும்‌ அணுகு சாலை அமைத்தல்‌ மற்றும்‌ தடுப்புச் சுவர்‌ அமைக்கும்‌ பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப் நேரில்‌ ஆய்வு செய்தார்.

பாலத்தை ஓட்டி விபத்துக்கள்‌ ஏற்படுவதை தடுக்கும்‌ பொருட்டு அமைக்கப்படவுள்ள அணுகு சாலைக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும்‌, மாநகராட்சி மூலம்‌ இணைப்புச்‌ சாலைகள்‌ ஏற்படுத்த மதிப்பீடுகள்‌ தயாரிக்கவும்‌ சம்பந்தப்பட்ட பொறியாளா்களுக்கு அவர் உத்தரவிட்டார்‌.



இதனைதொடர்ந்து மத்திய மண்டலத்திற்குட்பட்ட உக்கடம்‌ பகுதியில்‌ 127.89 கோடி ரூபாய் மதிப்பீட்டில்‌ கட்டப்பட்டு வரும்‌ உயர்மட்ட மேம்பாலப்பணியினை ஆய்வு செய்த ஆணையாளர் பிரதப், விரைவில்‌ பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்‌.

அதனைத்‌ தொடாந்து, உக்கடம்‌ புல்லுக்காடூ பகுதியில்‌ புதிதாக வணிக கடைகள்‌ அமையவுள்ள இடத்தை ஆய்வு செய்து, அப்பகுதியினை நெடுஞ்சாலைத்துறையினர்‌ சமன்படுத்தி மாநகராட்சியிடம்‌ வழங்கவும் அவர் அறிவுறுத்தினார்‌.

பின்னர், தெற்கு மண்டலத்திற்குட்பட்ட புட்டுவிக்கி பகுதியில்‌ உள்ள ராஜவாய்க்கால்‌ தூர்வாரும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ ஆய்வு செய்து, பழுதடைந்த புட்டுவிக்கி சாலையை செப்பனிட உரிய திட்டமதிப்பீடு தயாரிக்க சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார்‌.

பின்னர்‌, வார்டு எண். 92-க்குட்பட்ட சுகுணாபுரம்‌ காமராஜா்‌ நகரில்‌ குறிச்சி, குனியமுத்தூர்‌ பகுதிகளில்‌ பாதாள சாக்கடை குழாய்‌ அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருவதை ஆய்வு செய்த ஆணையாளர் பிரதாப், பாதாள சாக்கடை குழாய்‌ அமைக்கும்‌ பணிகளை தரமாகவும்‌, விரைவாகவும்‌ செய்து முடித்து பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.



இந்த ஆய்வுகளின்போது, துணை மேயர்‌ வெற்றிசெல்வன்‌, தெற்கு மண்டல தலைவர்‌ தனலட்சுமி, மாமன்ற உறுப்பினர்கள்‌ அகமது கபீர்‌, அப்துல்‌ காதர்‌, பாபு, நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர்‌ சுந்தரமூரத்தி, உதவி கோட்டப்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளார்கள், உதவி நகரமைப்பு அலுவலர்கள், உதவி பொறியாளர்கள்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...