கோவை வேளாண் பல்கலையில் தொழில் கூடங்களை பார்வையிட்ட மத்திய வேளாண் கூடுதல் செயலாளர்

கோவை வேளாண் பல்கலைகழகத்தில் அமைந்துள்ள தொழில் கூடங்களை பார்வையிட்ட மத்திய வேளாண்மை கூடுதல் செயலாளர் அபிலாஷ் லிக்கி, நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் கருவிகள் குறித்து ஆசிரியர்கள் மற்றும் அறிவியலாளர்களிடம் கேட்டறிந்தார்.


கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள தொழில் கூடங்களை மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கூடுதல் செயலாளர் அபிலாஷ் லிக்கி பார்வையிட்டார். அப்போது அங்குள்ள நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் கருவிகள் குறித்து பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் கீதாலட்சுமி மற்றும் ஆசிரியர்கள், அறிவியலாளர்களிடம் கேட்டறிந்தார்.



அதனை தொடர்ந்து, வேளாண்மை பல்கலைக்கழகத்தில் தமிழக தேனீ வளர்ப்பாளர்களுடனான கலந்தாய்வுநடைபெற்றது. பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி மற்றும் பூச்சியியல் துறை தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அபிலாஷ் லக்கி,தேசிய தேனீ வாரியத்தின் இயக்குநர் பட்லே உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.



இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட தேனீ வளர்ப்பாளர்கள் மற்றும் தேனீ ஆர்வலர்கள் பங்கேற்று, தேனீ வளர்ப்பு குறித்த தங்களது அனுபவங்கள், எதிர்கொண்ட சவால்கள், சந்தைப்படுத்துதல் குறித்த அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.



இந்தக் கலந்தாய்வு கூட்டத்தில் தேன் சார்ந்த பொருட்களின் கண்காட்சியும் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.டி.பி. தேனீப் பண்ணை சார்பில் வடிவமைக்கப்பட்ட நவீன தேன் எடுக்கும் இயந்திரத்தை மத்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை கூடுதல் செயலாளர் அபிலாஷ் லிக்கி, வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் தேனீ வளர்ப்பாளர்களுக்கும், தேனீ ஆர்வலர்களுக்கும் அறிமுகப்படுத்தினர். நவீன தேன் எடுக்கும் இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து ஏ.டி.பி தேனீ பண்ணையின் உரிமையாளர் தண்டாயுதபாணி விளக்கமளித்தார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...