ஈச்சனாரியில் தனியார் நர்சிங் கல்லூரி பொது செவிலியர் மற்றும் தாதியர் படிப்பு மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்

தரச்சான்றிதழ் உள்ளது என்று கூறி கல்லூரி நிர்வாகம் தங்களை ஏமாற்றியதாக கூறி 3 நாட்களாக அபிராமி நர்சிங் கல்லூரி மாணவிகள், வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


கோவை: கோவை ஈச்சனாரி அருகே செயல்பட்டு வரும் அபிராமி நர்சிங் கல்லூரியில், பி.எஸ்.சி நர்சிங் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகள் உள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் கூடுதலாக GNM (பொது செவிலியர் மற்றும் தாதியர்) புதிய படிப்பை இணைத்துள்ளனர். இதில், கேரளா மற்றும் தமிழக மாணவ, மாணவிகள் படித்து வந்தாலும், பெரும்பாலானோர் கேரளாவை சேர்ந்த மாணவிகளே பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், இக்கல்லூரியில் பொது செவிலியர் மற்றும் தாதியர் படிப்பை முடித்த மாணவர்களுக்கு INC என்ற வெளிநாட்டிற்கு சென்று பணியாற்றும் தகுதிச் சான்றிதழ் கல்லூரி நிர்வாகம் வழங்காமல் இருந்ததாக தெரிகிறது.



விசாரணையில், அந்த தரச்சான்றிதழ் அக்கல்லூரியில் இல்லை என தெரியவந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவ, மாணவிகள், தங்களை ஏமாற்றி கல்லூரியில் சேர்ந்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், நடப்பு ஆண்டில் அந்த படிப்பில் சேரந்தவர்கள் தங்கள் கட்டணம் மட்டும் சான்றிதழை திரும்ப தர வலியுறுத்தி போராடி வருகின்றனர்.



கடந்த 4 நாட்களாக வகுப்புகளை புறக்கணித்து வரும் மாணவிகள், சுகாதாரத்துறை மற்றும் மதுக்கரை போலீசில் புகாரும் அளித்துள்ளனர். ஆனாலும், நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்பதால், அக்கல்லூரி மாணவர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க வந்தனர்.



3 நாட்களாக போராடி வரும் மாணவிகள், உடனடியாக அவர்களது மனு மீது நடவடிக்கை எடுத்து சான்றிதழ் கட்டணம் மற்றும் நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...