ஈச்சனாரியில் தனியார் நர்சிங் கல்லூரி பொது செவிலியர் மற்றும் தாதியர் படிப்பு மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்

தரச்சான்றிதழ் உள்ளது என்று கூறி கல்லூரி நிர்வாகம் தங்களை ஏமாற்றியதாக கூறி 3 நாட்களாக அபிராமி நர்சிங் கல்லூரி மாணவிகள், வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


கோவை: கோவை ஈச்சனாரி அருகே செயல்பட்டு வரும் அபிராமி நர்சிங் கல்லூரியில், பி.எஸ்.சி நர்சிங் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகள் உள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் கூடுதலாக GNM (பொது செவிலியர் மற்றும் தாதியர்) புதிய படிப்பை இணைத்துள்ளனர். இதில், கேரளா மற்றும் தமிழக மாணவ, மாணவிகள் படித்து வந்தாலும், பெரும்பாலானோர் கேரளாவை சேர்ந்த மாணவிகளே பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், இக்கல்லூரியில் பொது செவிலியர் மற்றும் தாதியர் படிப்பை முடித்த மாணவர்களுக்கு INC என்ற வெளிநாட்டிற்கு சென்று பணியாற்றும் தகுதிச் சான்றிதழ் கல்லூரி நிர்வாகம் வழங்காமல் இருந்ததாக தெரிகிறது.



விசாரணையில், அந்த தரச்சான்றிதழ் அக்கல்லூரியில் இல்லை என தெரியவந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவ, மாணவிகள், தங்களை ஏமாற்றி கல்லூரியில் சேர்ந்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், நடப்பு ஆண்டில் அந்த படிப்பில் சேரந்தவர்கள் தங்கள் கட்டணம் மட்டும் சான்றிதழை திரும்ப தர வலியுறுத்தி போராடி வருகின்றனர்.



கடந்த 4 நாட்களாக வகுப்புகளை புறக்கணித்து வரும் மாணவிகள், சுகாதாரத்துறை மற்றும் மதுக்கரை போலீசில் புகாரும் அளித்துள்ளனர். ஆனாலும், நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்பதால், அக்கல்லூரி மாணவர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க வந்தனர்.



3 நாட்களாக போராடி வரும் மாணவிகள், உடனடியாக அவர்களது மனு மீது நடவடிக்கை எடுத்து சான்றிதழ் கட்டணம் மற்றும் நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...