மக்கள் விரோதப்போக்கில் செயல்படும் மத்திய அரசைக் கண்டித்து வெல்ஃபேர் பார்டி ஆஃப் இந்தியா ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு இந்தியா



தொடர்ந்து மக்கள் விரோதப் போக்கை கடைபிடித்து வரும் மத்திய அரசைக் கண்டித்து வெல்ஃபேர் பார்டி ஆஃப் இந்தியா சார்பில் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை ஆர்ப்பாட்டங்கள், பேரணி நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தேசிய செயலாளர் சுப்ரமணி அறிவித்துள்ளார்.



இன்று காலை கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் அனைத்து பத்திரிகையாளர்களை சந்தித்த வெல்ஃபேர் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய செயலாளர் சுப்ரமணி கூறியதாவது:-

மத்திய அரசு பல்வேறு புதிய திட்டங்களை இந்தியாவில் வகுத்து வருகின்றது. திட்டங்கள் தோல்வியடைவதை ஒப்புக்கொள்ளாத மத்திய அரசு அதற்கு மாற்றாக மீண்டுமொரு புதிய சட்டத்தை செயல்படுத்துகிறது.

அதற்கு தக்க உதாரணம் பணமதிப்பிழப்பு நடவடிக்கையே. வெளி நாட்டில் இருக்கும் கருப்பு பணத்தை எல்லாம் மீட்டு நாட்டுமக்கள் வங்கிக்கணக்குகளில் ரூ.15 லட்சம் வரவு வைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது தேர்தல் வாக்குறுதியாக கூறினார். 

ஆனால் அதை செயல்படுத்த முடியாமல், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கையில் எடுத்துள்ளார். இதனால் பல மக்கள் துன்புற்று வருகின்றனர். 

மத ரீதியான பிரச்சாரங்களை மத்திய அரசு மேற்கொள்கிறது. மாட்டுக்கறி உண்பவர்கள் தேசிய விரோதிகளாக வர்ணிக்கப்பட்டு வருகிறார்கள். 

அதோடு தேசிய பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களிடமும் மதம் சார்ந்த சிந்தனைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இது தடுக்கப்பட வேண்டும்.

மேலும், ரயில்வே துறையை தனியார் மயமாக்குதல், பாமர மக்களிடத்தில் கேஷ் லெஸ் பரிவர்த்தனையை திணிப்பது போன்ற பல்வேறு மக்கள் விரோத போக்கை மத்திய அரசு செய்து வருகிறது.

இதை கண்டித்து வெல்ஃபேர் பார்டி ஆஃப் இந்தியா சார்பில் வரும் ஏப்ரல் 1 முதல் 25ம் தேதி வரை ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்த முடிவு செய்துள்ளோம். 

25-ம் தேதி தில்லியில் குறைந்தபட்சம் 5 ஆயிரம் பேரை திரட்டி பேரணி நடத்த உள்ளோம். மேலும், மாநில அளவிலான பிரச்சனைகளை எங்கள் கட்சி கையில் எடுத்து போரடும்" இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...