அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு அரசு கல்லூரிகளில் பணி வழங்குவதை எதிர்த்து அரசு கல்லூரி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து ஆசிரியர்கள், ஊழியர்கள் என சுமார் 1000-ம் பேர் தமிழகத்தில் செயல்படும் அரசு கலை கல்லூரிகளில் பணியமர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் உள்ள 87 அரசு கல்லூரிகளின் ஆசிரியர்களும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

தொடர்ந்து, கோவை அரசு கலை கல்லூரி ஆசிரியர்களும், தமிழ்நாடு அரசு கலைக்கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தை சேர்ந்தோருமான 50க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இது குறித்து, தமிழ்நாடு அரசு கலைக்கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தின்  மாநில துணை தலைவர் வீரமணி கூறியதாவது :- 

கடந்த 2008-ம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து 319 பேர் சமூக நீதிக்கு எதிராக அரசு கல்லூரிகளில் பணியமர்த்தப்பட்டனர். தற்போது அதே நிலை நீடிக்கிறது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேலைக்கு சேர்ந்த பலர் லஞ்சம் கொடுத்ததன் மூலமாக பணியில் சேர்ந்தவர்கள். அங்கு நிர்வாக முறைகேடு ஏற்படும்போது பல்கலைக்கழகத்தில் உறுப்பு  கல்லூரிகளில் பணியமர்த்துவதை விடுத்து, அரசு கல்லூரிகளில் பணியமர்த்துவது நியாயமற்ற செயல். இதனால், 10 வருடத்திற்க் மேல் அரசு பணிக்காக காத்திருக்கும் பலருக்கு பாதிப்பு ஏற்படும். இந்த முயற்சியை அரசு கைவிட வேண்டும்.அதுவரை எங்கள் போராட்டம் தொடரும். 

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...