நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.


Coimbatore: தமிழர்களின் தொன்மையான சோழர் வரலாற்றுப் பெருமையை 300 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்டெடுத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் விஜய் இதுவரை எந்தவித பாராட்டும் தெரிவிக்காதது ஏமாற்றமளிப்பதாக பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.



நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்தின் லெய்டன் பல்கலைக்கழகத்திலிருந்து தாயகம் திரும்பியிருப்பது தமிழகத்திற்கே பெருமை சேர்க்கும் வரலாற்றுச் சம்பவம் என்றும், ஆனால் மாநில முதலமைச்சர் இதுகுறித்து மௌனம் காக்கிறார் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.



“தமிழ் பண்பாட்டையும் சோழர் வரலாறையும் உலக அரங்கில் மீண்டும் உயர்த்திய பிரதமருக்கு ஒரு வார்த்தை நன்றி கூட தெரிவிக்காதது வெறும் மறதி அல்ல; அது திட்டமிட்ட அலட்சியம் போல தெரிகிறது” என்றும் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.



மேலும், செப்பேடுகள் தமிழகத்திற்கு வரும் நாளை அரசு சார்பில் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்றும் வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தள பதிவில், “இந்தியர் அனைவருக்கும் இது ஒரு மகிழ்ச்சிகரமான தருணம். 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்ப வருகின்றன. இதனை ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் ராப் ஜெட்டனுடன் இணைந்து பங்கேற்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளைக் கொண்ட இந்த செப்பேடுகளில் பெரும்பாலான எழுத்துக்கள் உலகின் மிகவும் அழகான மொழிகளில் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன், தனது தந்தை முதலாம் ராஜராஜ சோழன் வழங்கிய வாய்மொழி வாக்குறுதியை முறைப்படுத்தியதற்கான சான்றுகளாக இவை விளங்குகின்றன. சோழர்களின் பெருமை, கலாச்சாரம் மற்றும் கடற்படை திறனை இந்தியர்கள் பெருமையுடன் நினைவுகூர்கிறார்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.



அதேபோல், “இந்த செப்பேடுகளை பல ஆண்டுகளாக பாதுகாத்து வந்த நெதர்லாந்து அரசுக்கும், லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் நன்றி தெரிவிக்கிறேன்” என்றும் பிரதமர் மோடி தனது பதிவில் கூறியுள்ளார்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...