நீலகிரி உதகை அருகே கடைகளை உடைத்து சேதப்படுத்திய கரடிகள் - பொதுமக்கள் அச்சம்..!

உதகை அடுத்த கல்லட்டி பகுதியில் புகுந்த 2 கரடிகள் அங்குள்ள டீ கடை உள்ளிட்ட 3 கடைகளை உடைத்து சேதப்படுத்திய நிலையில், அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்கள், உடனடியாக கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளுக்கு நாள் கரடிகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

குடியிருப்பு பகுதிகளுக்குள் அடிக்கடி உலா வரும் கரடிகள், உணவு தேடி வீடுகளுக்குள் புகுந்து விடுவதால், பொதுமக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் உதகை அடுத்த கல்லட்டி பகுதிக்குள் இன்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 கரடிகள், அடுத்தடுத்து 3 கடைகளுக்குள் புகுந்து பொருட்களை சேதபடுத்தி உள்ளன.



முதலில் டீ கடைக்குள் புகுந்த கரடிகள் பாத்திரங்களையும் உணவு பொருட்களையும் வெளியில் எடுத்து வந்து சேதப்படுத்தி உள்ளன.



இதனையடுத்து அந்த கரடிகள் வீடு வீடாக உணவு தேடி சென்றதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதனிடையே கரடிகள் கடைகளுக்குள் சென்று வெளியில் வந்து சுற்றித்திரிந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் பொது மக்களை அச்சுறுத்தி வரும் 2 கரடிகளையும் உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என உதகை வனத்துறையினருக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...