நஞ்சராயன் பறவைகள் சரணாலயம் சுற்றுலா மையமாகவும், அறிவுசார் மையமாகவும் மேம்படுத்தப்படும் - திருப்பூரில் அமைச்சர் கா.ராமச்சந்திரன்

திருப்பூரில் உள்ள நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தில் ஆய்வு மேற்கொண்ட வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், சரணாலயத்திற்கு அருகே கடந்த அதிமுக குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்ட நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் சர்க்கார் பெரியபாளையம் பகுதியில் உள்ள நஞ்சராயன் குளம் தமிழகத்தின் 17வது பறவைகள் சரணாலயமாக தமிழக அரசால் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.



இந்நிலையில், வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வின் போது, நவீன கருவிகள் மூலம் பறவைகள் சரணாலயத்தில் உள்ள வெளிநாட்டு பறவை இனங்களை பார்வையிட்ட அமைச்சர் விவசாயிகளுக்கு மரக்கன்றுகளையும் வழங்கினார்.



இதையடுத்து அமைச்சர் கா.ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசியதாவது,



வெளிநாட்டு பறவை இனங்கள் 126 வகை பறவைகள் வந்து செல்லக்கூடிய வகையில் அதற்கு ஏற்றார் போல் நஞ்சராயன் குளம் அமைந்துள்ளது. தமிழக அரசு இதனை 17வது சரணாலயமாக அறிவித்து 7.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

நஞ்சராயன் குளம் முழுமையான பொதுமக்கள் பார்வையிட்டு பயன்படுத்தக்கூடிய இடமாக பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. பறவைகள் சரணாலயமாக மட்டுமல்லாது சிறந்த சூழல் சுற்றுலா மையமாகவும் நஞ்சராயன் பறவைகள் சரணாலயம் கொண்டு வரப்படும்.

உதகையில் உள்ள பொட்டானிக்கல் கார்டன் போல பொதுமக்கள் தினசரி பொழுது போக்க வந்து செல்லும் இடமாக மாற்றப்படும். நஞ்சராயன் குளத்தில் உள்ள தண்ணீரை சுத்தகரிக்க பொதுப்பணித்துறை சார்பில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், அவை போதுமானதாக இல்லாத நிலையில் மாநகராட்சி சார்பாக மேலும் ஒரு சுத்திகரிப்பு நிலையம் உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது.

பறவைகள் சரணாலயமாக மாற்றப்பட்டு உள்ளதால், கடந்த அதிமுக ஆட்சியில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்ட நிலத்தை மீண்டும் தமிழக அரசு பறவைகள் சரணாலயத்திற்காக கையகப்படுத்த தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வில் திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...