மத்திய அரசின் தவறான கொள்கைக்கு திருப்பூர் தொழில் துறையே உதாரணம் - திருப்பூரில் சி.பி.எம் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத்.

நவம்பர் புரட்சி தின 105 வது ஆண்டையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூரில் நடைபெற்ற செந்தொண்டர் பேரணி, பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிருந்தா காரத், பாஜக அரசின் தவறான கொள்கைகளால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையை இழந்து உள்ளதாகவும், நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.



திருப்பூர்: நவம்பர் புரட்சி தினத்தின் 105 வது ஆண்டை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், செந்தொண்டர் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கலந்து கொண்டார்.



திருப்பூர் குமார் நகர் பகுதியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு அலுவலகத்தில் இருந்து துவங்கிய செந்தொண்டர் பேரணி புஷ்பா ரவுண்டானா,ரயில்வே மேம்பாலம், குமரன் சாலை வழியாக பொதுக்கூட்டம் நடைபெற்ற யூனியன் மில் சாலையில் நிறைவடைந்தது.

இந்த பொதுக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் பேசியதாவது, மத்திய அரசின் தவறான கொள்கைகளுக்கு திருப்பூர் தொழில்துறையே உதாரணம். மத்திய அரசின் தவறான கொள்கைகளால் பல்லாயிரக்கணக்கான பின்னலாடை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

இந்தியா முழுவதும் பெரும் சவாலை சந்திக்கிறது. ஆனால் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் இருப்பது நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. திமுக தலைமையிலான கூட்டணி பாஜக -ஆர்.எஸ்.எஸ்.க்கு எதிராக அவர்களின் தவறான கொள்கைகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது.



தமிழகத்தில் மின் கட்டண உயர்வு காரணமாக சிறு குறு நடுத்தர தொழில்கள் பாதிப்புக்குள்ளாவது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளது. விரைவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றும் என நம்புகிறோம்.



பாஜக தலைமையிலான மத்திய அரசு கார்ப்பரேட்டுகளுக்கான அரசாக உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கிய 10 லட்சம் கோடி வாராக் கடனாக தள்ளுபடி செய்து மீண்டும் அவர்களுக்கு கடன் எளிதில் வழங்கி வருகிறது. நாம் மிகப் பெரும் சவாலை சந்தித்து வருகிறோம். இருப்பினும் கம்யூனிஸ்டுகள் புதிய இந்தியாவை உருவாக்குவதில் நம்பிக்கையோடு போராடிக் கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த பொதுக்கூட்டத்தில் கோவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...