திறந்தவெளி மலம் கழித்தலற்ற மாநகராட்சி என்ற சான்றுக்கு விண்ணப்பிக்கவுள்ள கோவை மாநகராட்சி - மக்கள் கருத்துகளை தெரிவிக்க அழைப்பு..!

திறந்தவெளி மலம், சிறுநீர் கழித்தலற்ற மாநகராட்சி என்ற சான்றுக்கு கோவை மாநகராட்சி விண்ணப்பிக்க உள்ளதால், பொதுமக்கள் இதுகுறித்த கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகளை 15 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என மாநகராட்சி ஆணையர் பிரதாப் அறிக்கை.



கோவை: கோவை மாநகராட்சி திறந்த வெளியில்‌ மலம்‌ கழித்தலற்ற மாநகராட்சி என சான்று பெறுவதற்கு விண்ணப்பிக்கப்பட உள்ளதால் மக்கள் தங்கள் ஆட்சேபனைகளை 15 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என மாநகராட்சி ஆணையர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, மத்திய நகர்ப்புற மற்றும்‌ வீட்டுவசதி அமைச்சகத்தின்‌ மூலம்‌ தூய்மை பாரத திட்டம்‌ 2.0-ன் கீழ்‌ கோவை மாநகராட்சியில்‌ உள்ள 100 வார்டுகளில்‌ திறந்த வெளியில்‌ மலம்‌ மற்றும்‌ சிறுநீர்‌ கழித்தல்‌ அற்ற மாநகராட்சி சான்று பெறுவதற்கான நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனைதொடர்ந்து கோவை மாநகராட்சியினை திறந்த வெளியில்‌ மலம்‌ கழித்தல்‌ அற்ற மாநகராட்சி என சான்று பெறுவதற்கு விண்ணப்பிக்கப்பட உள்ளது.

பொதுமக்கள்‌ இது குறித்த தங்களின்‌ ஆட்சேபனைகள்‌, கருத்துக்களை தெரிவிக்க விரும்பினால்‌ 15 நாட்களுக்குள்‌ கோவை மாநகராட்சி அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது எழுத்துப்பூர்வமாகவோ ஆலோசனைகள்‌ மற்றும்‌ ஆட்சேபனையை தெரிவிக்கலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...