கோவை சூலூரில் 92 வயது மூதாட்டிக்கு நேரில் சென்று விவசாய ஊக்கத்தொகையை வங்கியில் நேரடியாக வழங்க வழிவகை செய்த வேளாண் நலத்துறை..!

சூலூரில் வயது முதிர்வு காரணமாக விவசாய ஊக்கத்தொகை வாங்க முடியாமல் இருந்த மூதாட்டிக்கு வேளாண் நலத்துறை சார்பில் வீட்டுக்கே சென்று விவசாய ஊக்கத்தொகையை நேரடியாக வழங்க வழிவகை செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை மாவட்டம் சூலூரில் பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் 13வது தவணைத் தொகை பெறுவதற்காக இ.கே.ஒய்.சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது அதன்படி அனைத்து விவசாயிகளும் தங்களது தொலைபேசி எண்ணை ஆதாரில் இணைக்க வேண்டும் என வேளாண் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதன்படி விவசாயிகள் தங்கள் ஆதார் எண்ணை இணைத்து புதுப்பித்து வருகின்றனர். மேலும் வேளாண் நலத்துறை அலுவலகத்திற்கு வந்து புதுப்பிக்க முடியாத விவசாயிகளுக்கு நேரில் சென்று அவர்களுடைய ஆவணங்களை சரிபார்த்து புதுப்பிக்க வேண்டும் என வேளாண்மை நலத்துறை தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.



அதன் அடிப்படையில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பாக கண்ணம்பாளையத்தை சேர்ந்த 92 வயது மூதாட்டிக்கு, வேளாண் நலத்துறை மற்றும் தபால் துறை சார்பில் மூதாட்டியின் வீட்டிற்கு சென்று கைரேகையை பதிவு செய்து அவருடைய வங்கி கணக்கு பணத்தை செலுத்துவதற்கான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு இ.கே.ஒய்.சி செய்து பணத்தை வங்கியில் கிடைப்பதற்கான வழிவகை செய்தனர்.



இது குறித்து மூதாட்டியின் பேத்தி கலைச்செல்வி பேசியதாவது, வீட்டிற்கு வந்து கிசான் திட்டத்தின் மூலம் அதிகாரிகள் விவசாய ஊக்கத்தொகை வழங்குவதற்கான வழிவகை செய்தனர். இது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...