கோவை சூலூரில் 92 வயது மூதாட்டிக்கு நேரில் சென்று விவசாய ஊக்கத்தொகையை வங்கியில் நேரடியாக வழங்க வழிவகை செய்த வேளாண் நலத்துறை..!

சூலூரில் வயது முதிர்வு காரணமாக விவசாய ஊக்கத்தொகை வாங்க முடியாமல் இருந்த மூதாட்டிக்கு வேளாண் நலத்துறை சார்பில் வீட்டுக்கே சென்று விவசாய ஊக்கத்தொகையை நேரடியாக வழங்க வழிவகை செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை மாவட்டம் சூலூரில் பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் 13வது தவணைத் தொகை பெறுவதற்காக இ.கே.ஒய்.சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது அதன்படி அனைத்து விவசாயிகளும் தங்களது தொலைபேசி எண்ணை ஆதாரில் இணைக்க வேண்டும் என வேளாண் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதன்படி விவசாயிகள் தங்கள் ஆதார் எண்ணை இணைத்து புதுப்பித்து வருகின்றனர். மேலும் வேளாண் நலத்துறை அலுவலகத்திற்கு வந்து புதுப்பிக்க முடியாத விவசாயிகளுக்கு நேரில் சென்று அவர்களுடைய ஆவணங்களை சரிபார்த்து புதுப்பிக்க வேண்டும் என வேளாண்மை நலத்துறை தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.



அதன் அடிப்படையில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பாக கண்ணம்பாளையத்தை சேர்ந்த 92 வயது மூதாட்டிக்கு, வேளாண் நலத்துறை மற்றும் தபால் துறை சார்பில் மூதாட்டியின் வீட்டிற்கு சென்று கைரேகையை பதிவு செய்து அவருடைய வங்கி கணக்கு பணத்தை செலுத்துவதற்கான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு இ.கே.ஒய்.சி செய்து பணத்தை வங்கியில் கிடைப்பதற்கான வழிவகை செய்தனர்.



இது குறித்து மூதாட்டியின் பேத்தி கலைச்செல்வி பேசியதாவது, வீட்டிற்கு வந்து கிசான் திட்டத்தின் மூலம் அதிகாரிகள் விவசாய ஊக்கத்தொகை வழங்குவதற்கான வழிவகை செய்தனர். இது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...