தேசிய அளவிலான தடகளப் போட்டியில் வென்ற கோவையை சேர்ந்த தலைமை காவலருக்கு எஸ்.பி வாழ்த்து..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றும் கோவிந்தராஜ் என்பவர், மராட்டிய மாநிலம் நாசிக்கில் நடைபெற்ற தடகள போட்டியில், 100, 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டு வெள்ளி பதக்கமும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கமும் வென்றார்.



கோவை: கடந்த மாதம் (நவம்பர்) 25-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை மராட்டிய மாநிலம் நாசிக்கில் 40 வயதுக்கு மேற்பட்டோருக்கான தேசிய அளவிலான தடகள போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில், பங்கேற்ற கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றும் கோவிந்தராஜ் என்பவர், 100, 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டு வெள்ளி பதக்கமும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கமும் வென்றார்.



இந்த நிலையில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், தலைமை காவலர் கோவிந்தராஜை அவரது அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டினார்.



காவல் துறையினரின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற காவலரை எஸ்பி நேரில் அழைத்து வாழ்த்தியுள்ளது மேலும் ஊக்கமளிப்பதாக காவலர்கள் தெரிவித்தனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...