பட்டா கேட்டு கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்த அத்திக்குட்டை அருந்ததியின மக்கள்..!

கோவை தொட்டியபாளையம் அடுத்த அத்திக்குட்டையை சேர்ந்த அருந்ததியின மக்கள், அரசு நலத்திட்டங்கள் கிடைக்காததால், தாங்கள் வசிக்கும் பஞ்சமி நிலத்துக்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தல்.



கோவை: கோவை மாவட்டம் தொட்டியப்பாளையம் அருகேயுள்ள அத்திக்குட்டை பகுதியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் அருந்திய சமூகத்தை சேர்ந்த பஞ்சமி நிலத்தை வழங்க கோரி 150 க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



ஆனால் பட்டா ஏதும் இல்லாததால் அரசு வழங்கக்கூடிய நலத்திட்ட உதவிகள் எதுவும் தங்களுக்கு கிடைப்பதில்லை எனவும் கூறுகின்றனர்.

இந்நிலையில், தாங்கள் வசித்து வரும் பஞ்சமி நிலத்திற்கு தங்களுக்கு பட்டா வழங்க வேண்டி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



மேலும், தங்கள் பகுதிகளுக்கு பட்டா வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தும் வகையிலான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி, மனு அளிக்க வந்ததால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...