கோவை செஞ்சேரி மலையில் வரும் டிச.14ல் தென்னை உழவர்கள் மாநாடு - தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அறிவிப்பு

கொப்பரை தேங்காய் கொள்முதல் விலையை ரூ.150ஆக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் டிசம்பர் 14ஆம் தேதி கோவை செஞ்சேரி மலையில் தென்னை உழவர்கள் மாநாடு நடைபெற உள்ளது.



கோவை: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பாக வருகிற 14ஆம் தேதி கோவை மாவட்டம் செஞ்சேரி மலையில் தென்னை உழவர்கள் கோரிக்கை மாநாடு நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு திருப்பூர் அகத்தியன் வீதியில் உள்ள தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது, தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் முருகசாமி செய்தியாளர்களை சந்திப்பில் பேசியதாவது, மத்திய அரசு கொப்பரை கொள்முதல் விலையை 105.90 ரூபாயிலிருந்து 150 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.

கொப்பரை கொள்முதல் ஏக்கர் ஒன்றுக்கு 285 கிலோவில் இருந்து 500 கிலோவாக உயர்த்த வேண்டும். கேரளாவை போல தமிழ்நாடு அரசு உழவர்களிடம் நேரடியாக உரித்த தேங்காயை டன் ஒன்றிற்கு 40,000 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய வேண்டும்.

பனை, தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கி விற்க அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தென்னை உழவர்களின் பல்வேறு கோரிக்கைகள் இந்த மாநாட்டில் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட உள்ளன.

இந்த மாநாட்டில் ஏராளமான விவசாயிகள் மற்றும் விவசாய சங்க அமைப்பினர் கலந்து கொள்ள உள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...