கோவை சரவணம்பட்டியில் மெகா சூதாட்டம் மற்றும் மது பாட்டில்கள் பதுக்கல் - ரூ.4.86 லட்சம் பறிமுதல், 32 பேர் கைது..!

இரு வேறு சம்பவங்களில், சரவணம்பட்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட இடங்களில் ரூ.4.86 லட்சத்தை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 31 பேரை கைது செய்தனர், அதே போல, 138 மதுபாட்டில்களை டாஸ்மாக்கில் பதுக்கி வைத்திருந்த நபரை கைது செய்தனர்.



கோவை: கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மெகா சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்த போது, ஒரு வீட்டில் ஒரு கும்பல் பணம் வைத்து சீட்டாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

அவர்களை போலீசார் பிடிக்க முயற்சி செய்த போது, போலீசார் வருவதை பார்த்ததும் அந்த கும்பல் அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. அவர்களை போலீசார் மடக்கிப்பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் ரூ.4.86 லட்சத்தை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 31 பேரை கைது செய்து, அவர்கள் சூதாட்டத்திற்கு வைத்திருந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

இதேபோன்று சரவணம்பட்டி சப் இன்ஸ்பெக்டர் பழனிசாமிக்கு கணபதி பகுதியில் திருட்டுத்தனமாக மதுபாட்டில் பதுக்கிவைத்து விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கிருந்த ஒரு டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் மது விற்பனையில் ஈடுபட்ட நெல்லையை சேர்ந்த கணேசன் (30) என்பவரை பிடித்தனர். மேலும், அவர் விற்பனைக்காக வைத்திருந்த 138 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...