2023 ஆம் ஆண்டுக்கான கோவை மாநகர காவல் துறையினருக்கான வருடாந்திர அணிவகுப்பு பயிற்சி - 15 நாட்கள் நடைபெறுகிறது

கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்று வரும் மாநகர காவல் துறையினருக்கான 2023 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர அணிவகுப்பு பயிற்சியில் 550 காவலர்களுக்கு யோகாசனம் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.


கோவை: ஆண்டுதோறும் கோவை மாநகர காவல் துறையினருக்கான வருடாந்திர அணிவகுப்பு பயிற்சி நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், 2023 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர அணிவகுப்பு பயிற்சி கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாக மைதானத்தில் நடைபெற்று வருகிறது.



கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பெயரில் ஆயுதப்படை உதவி ஆணையர் சேகர் மேற்பார்வையில் நடைபெற்று வரும் இந்த அணிவகுப்பு பயிற்சியில், மாநகர போலீசாருக்கு உடற்பயிற்சிகள், யோகா, துப்பாக்கி சுடுதல், பொதுமக்கள் இடத்திலான அணுகுமுறை, பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்படுவது போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.



மேலும், 15 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் சுமார் 550 மாநகர போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதிகாலையில் யோகாசன உடற்பயிற்சியில் துவங்கி தொடர்ந்து துப்பாக்கி சுடுதல், உட்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...