கோவை முழுவதும் நள்ளிரவு முதல் தொடர் மழை - மூடுபனியால் வாகன ஓட்டிகள் அவதி

கோவை மாவட்டம் முழுவதும் நள்ளிரவு முதல் தொடர் மழை பெய்து வரும் நிலையில் பல்வேறு இடங்களில் நிலவும் மூடுபனியால் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதி.



கோவை: கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.

இரு தினங்களுக்கு முன்பு மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில், அடுத்த 48 மணி நேரத்துக்கு தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், சேலம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, ஈரோடு, மாவட்டங்களில் இன்று மழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.



அதன்படி, நள்ளிரவு முதல் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளான காந்திபுரம், உக்கடம், சுந்தராபுரம், ஆர்.எஸ்.புரம், மற்றும் சூலூர், பேரூர் என பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது.

இதனிடையே பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் கடுமையான மூடுபனி இருந்தால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றன.

இந்நிலையில் இன்று பெரும்பாலான பள்ளிகளில் அரை இறுதி தேர்வு நடைபெற்று வருவதால் மாணவர்கள் மழையில் நனைந்தவாறு பள்ளிகளுக்கு சென்றனர்.

Newsletter

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...