கோவை தொண்டாமுத்தூரில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீர் - 120 குடும்பத்தினர் சமுதாய நலக்கூடத்தில் தங்க வைப்பு

தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதியில் நேற்று பெய்த கனமழை காரணமாக அட்டுக்கல் பகுதியில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால், அங்கிருந்த பொதுமக்கள் பாதுகாப்பாக சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


கோவை: தமிழகம் முழுவதும் இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்ய உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் மற்றும் தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதனால் அட்டுக்கல் பகுதியில் மலையில் இருந்து வடியும் நீர் வெள்ளப்பெருக்காக மாறி அப்பகுதியில் உள்ள புத்தூர், புது காலனி குடியிருப்புக்குள் நீர் புகுந்ததால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.



மேலும், அடுத்தடுத்து வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் அங்கிருந்த சுமார் 120 குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அருகே உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து அங்கு அவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.



இந்நிலையில் வெள்ள நீர் புகுந்த குடியிருப்புக்குள் இருக்கும் மழை நீரை, தொண்டாமுத்தூர் பேரூராட்சி ஊழியர்கள் மோட்டார்கள் மற்றும் லாரிகள் மூலம் அகற்றி வருகின்றனர்.



மேலும் சேரும், சகதியுமாக உள்ள பகுதிகளை தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்து வருகின்றனர்.

Newsletter

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...