அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின்: கோவை மாவட்ட திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்ற நிலையில் வடகோவை திமுக அலுவலகம் முன்பு காந்திபுரம் பகுதி செயலாளர் ஆர்.எம்.சேதுராமன் தலைமையில் திமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.



கோவை: திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்று கொண்டார்.

சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதை திமுகவினர், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். பல்வேறு அரசியல் பிரமுகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக, கோவை வடகோவை பகுதியில் உள்ள திமுக அலுவலகம் முன்பு காந்திபுரம் பகுதி செயலாளர் ஆர்.எம்.சேதுராமன் தலைமையில் கோவை மாவட்ட திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.



கடந்த 3 ஆண்டுகளாக திமுகவின் இளைஞரணி செயலாளராக செயல்பட்டு வந்த உதயநிதி ஸ்டாலின், கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...