கருஞ்சிறுத்தையை புகைப்படம் எடுத்த கோவையை சேர்ந்த புகைப்பட கலைஞருக்கு குவியும் பாராட்டு

கோவையை சேர்ந்த வன உயிரின புகைப்பட கலைஞர் ஜெயராஜ் கோவிந்தராஜூலு, அரிதாக கருதப்படும் கருஞ்சிறுத்தையை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்த நிலையில், வன உயிரின புகைப்பட ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.



கோவை: கோவை தண்ணீர் பந்தல் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ் கோவிந்தராஜூலு. வணிக தொழிலில் ஈடுபட்டுள்ள இவர், வன உயிரின புகைப்படங்கள் (Wildlife Photography) எடுப்பதில் அதிக ஆர்வம் கொண்டவராவார்.



இதன் காரணமாக கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு படங்களை எடுத்து வருகிறார். சமீபத்தில் வட இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த போது மிகவும் அரிதாக கருதப்படும் கருஞ்சிறுத்தையை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த 6 ஆண்டுகளாக வன உயிரின புகைப்படங்களை எடுத்து வருகிறேன். கோவை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வர்ணம் பூசப்பட்ட நாரை (பெய்ட்டட் ஸ்டார்க்) திக்கெல் நீல ஈப்பிடிப்பான் உள்ளிட்ட பல வன உயிரினங்களின் புகைப்படங்களை எடுத்துள்ளேன்.



சமீபத்தில் மத்திய பிரதேச மாநிலம் பென்ச் புலிகள் சரணாலய பகுதிக்கு சுற்றுலா சென்றோம். அங்கு மிகவும் அரிதாக பார்வைக்கு தட்டுப்படும் கருஞ்சிறுத்தை ஒன்றை கண்டோம். உடனடியாக எனது கேமராவில் அதை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தேன்.



சில நொடிகள் மட்டுமே காண கிடைத்தாலும் அதை மிக அருகில் பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சமூக வலைதளத்தில் பகிர்ந்த போது வன உயிரின புகைப்பட ஆர்வலர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...