கூடலூரில் பழைய இரும்பு, பிளாஸ்டிக் கடைகளில் பயங்கர தீ விபத்து - ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின

கூடலூர் - தேவர்சோலை நெடுஞ்சாலையில் உள்ள பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் கடையில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், தீ மளமளவென 2வது மாடிக்கும் பரவியதால் சுமார் 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து தேவர்சோலை செல்லும் நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள வணிக வளாகத்தில் உசேன் என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் கடை செயல்பட்டு வருகிறது.



இந்த கடையில் ஏராளமான பழைய பொருட்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலை திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது கூறப்படுகிறது. இதனை கண்ட அக்கம் பக்கம் கடைகாரர்கள் உடனடியாக கூடலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.



இந்நிலையில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் தீ மளமளவென 2-வது மாடிக்கும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



இந்த தீ விபத்தில் சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமாகின. இந்நிலையில் இந்த தீ விபத்தானது, மின் கசிவு காரணமாக ஏற்பட்டதா? அல்லது சதிச் செயலா என்பது குறித்து கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...