திருப்பூரில் கோவில் நிலத்தை மீட்க கோரி அடையாள ஆவணங்களை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

ஊத்துக்குளி அடுத்த வெள்ளிரவெளி அருகேயுள்ள மாகாளியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுத் தரக்கோரி பொதுமக்கள் அடையாள அட்டைகளை ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்து போராட்டம்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம் குன்னத்தூர் அருகேயுள்ள வெள்ளிரவெளி பகுதியில் நூறாண்டுகளுக்கு மேலாக பழமை வாய்ந்த நாடார் சமூகத்தை சேர்ந்தவர்களின் குலதெய்வமான மாகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது.



அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த கோவிலில் தினமும் மூன்று கால பூஜை வழிபாடு மற்றும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசியல் செல்வாக்கு நிறைந்த மோகன் குமார் மற்றும் சின்னச்சாமி ஆகியோர் கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக பொங்கல் விழாவின் போது இடவசதி பற்றாக்குறை ஏற்படுவதால் கோவில் நிலத்தை மீட்டு கோவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.



இந்நிலையில், உடனடியாக கோவில் நிலத்தை மீட்டு தர வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்கள் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் கார்டு உள்ளிட்டவற்றை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



வெள்ளிரவெளி பகுதி மக்களின் இந்த போராட்டத்தின் காரணமாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சில மணி நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...