கோவை நரசிபுரம் அருகே விவசாய தோட்டங்களில் உலா வரும் காட்டு யானை - சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு..!

தொண்டாமுத்தூர் அடுத்த நரசிபுரம் அருகே விவசாய நிலங்களில் உலா வரும் காட்டு யானைகள், பயிர்களை சேதப்படுத்தி வரும் நிலையில், அப்பகுதியில் யானைகள் உலா வரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே நரசிபுரம் பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களுக்குள் கடந்த சில வாரங்களாக காட்டு யானைகள் கூட்டம் இரவு நேரங்களில் உலா வருகிறது.

அவ்வாறு உலா வரும் காட்டு யானைகள், சில நேரங்களில் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தி வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இதன் காரணமாக அப்பகுதியில், வனத்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து சென்று விவசாய நிலங்களில் உலா வரும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி வருகின்றனர்.



அதே நேரத்தில் இரவு நேரங்களில் காட்டு யானைகள் உலா வருவதால், அச்சமடைந்துள்ள அப்பகுதி விவசாயிகள் வெளியே வரவே தயங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள், இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்லவும் கூட முடியாத நிலை உள்ளது.



இந்நிலையில் நரசிபுரம் பகுதியில் இரவு நேரங்களில் விவசாய நிலம் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே காட்டு யானைகள் உலா வரும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே யானைகள் விவசாய தோட்டங்களுக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வனத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...