கோவையில் ஓய்வூதியர் தின விழா - பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை

கோவை மாவட்டம் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் தலைவர் பலராமன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக, மாநில தலைவர் கங்காதரன் கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்தார்.



கோவை: தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் கோவை மாவட்டம் சார்பாக ஓய்வூதியர் தின விழா வடகோவை மாநகராட்சி ராமலிங்க மண்டப அரங்கில் இன்று நடைபெற்றது.

கோவை மாவட்ட தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் தலைவர் பலராமன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக, மாநில தலைவர் கங்காதரன் கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட தலைவர் பலராமன், மாநில அரசு தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அதேபோல, மத்திய அரசு வழங்கியது போல் அகவிலை படியை உரிய தேதியில் மாநில அரசு ஓய்வூதியர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பேசினார்.



விழாவில், உயிரின் சுவாசம் அறக்கட்டளை நிறுவனரும், ராயல் கேர் மருத்துவமனை தலைவருமான மருத்துவர் மாதேஸ்வரன், சமூக கொடையாளர் ஓய்வு பெற்ற அலுவலர் கிருஷ்ணன் ஆகியோருக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.



நிகழ்ச்சியில், துணை தலைவர் ராமசுந்தரம், சங்க நிர்வாகிகள் முகமது சிங்காரவேலு வேலுச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...