கோவையில் ஓய்வூதியர் தின விழா - பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை

கோவை மாவட்டம் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் தலைவர் பலராமன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக, மாநில தலைவர் கங்காதரன் கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்தார்.



கோவை: தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் கோவை மாவட்டம் சார்பாக ஓய்வூதியர் தின விழா வடகோவை மாநகராட்சி ராமலிங்க மண்டப அரங்கில் இன்று நடைபெற்றது.

கோவை மாவட்ட தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் தலைவர் பலராமன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக, மாநில தலைவர் கங்காதரன் கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட தலைவர் பலராமன், மாநில அரசு தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அதேபோல, மத்திய அரசு வழங்கியது போல் அகவிலை படியை உரிய தேதியில் மாநில அரசு ஓய்வூதியர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பேசினார்.



விழாவில், உயிரின் சுவாசம் அறக்கட்டளை நிறுவனரும், ராயல் கேர் மருத்துவமனை தலைவருமான மருத்துவர் மாதேஸ்வரன், சமூக கொடையாளர் ஓய்வு பெற்ற அலுவலர் கிருஷ்ணன் ஆகியோருக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.



நிகழ்ச்சியில், துணை தலைவர் ராமசுந்தரம், சங்க நிர்வாகிகள் முகமது சிங்காரவேலு வேலுச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...