ரயில் விபத்தில் யானைகள் உயிரிழப்பு: தடுப்பு நடவடிக்கையாக வாளையார் - மாவுத்தம்பதி இடையே பாலம் கட்டும் பணிகள் தொடக்கம்

கோவை அருகே ரயிலில் சிக்கி யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உயிரிழக்கும் சம்பவங்களை தடுக்கும் விதமாக ரயில்வே துறை சார்பில் வாளையார் - மாவுத்தம்பதி இடையே பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.



கோவை: கோவை மாவட்டம் மதுக்கரை வழியாக கேரளாவிற்கு செல்லும் ரயில்கள் தமிழக கேரள எல்லை வனப்பகுதியான வாளையார், மாவுத்தம்பதி, எட்டிமடை உள்ளிட்ட பகுதிகளின் வழியாக வனத்துக்குள் கடந்து செல்ல வேண்டும்.

அந்த வனப்பகுதியில் யானை, மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான காட்டு வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த காட்டுப் பகுதியில் உள்ள யானைகள் வாளையாருக்கும், மாவுத்தம்பதிக்கும் இடையே உள்ள ரயில் பாதையை தொடர்ந்து கடந்து செல்லும் போது, அவ்வப்போது விபத்தில் சிக்கி உயிரிழந்து வருவது தொடர்கதையாகி வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பு கூட அதே ரயில் பாதையில் தண்டவாளத்தை யானைகள் கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த ரயில் மோதி மூன்று யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன.

தொடர்ந்து வனத்துறை மற்றும் வன உயிரின ஆர்வலர்கள் இது குறித்து முறையிட்டு வந்த நிலையில், அங்கு வந்த ரயில்வே அதிகாரிகள் அந்த இடத்தை ஆய்வு செய்து அங்கு யானைகள் தண்டவாளத்தை கடந்து செல்வதை தடுக்க அங்கு பாலம் அமைக்க முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து தற்போது வாளையாருக்கும் மாவுத்தம்பதிக்கும் இடையே பாலம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதே போன்று வனத்துக்குள் ரயில் பயணிக்கின்ற இடங்களில் பாலம் கட்டுதல் உள்ளிட்ட விபத்து தடுப்பு நடவடிக்கையில் அரசு ஈடுபட வேண்டும் என வன உயிரியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வன விலங்குகள் ரயிலில் சிக்கி உயிரிழப்பதை தடுக்கும் வகையில், ரயில்வே துறையினர் பாலம் அமைத்து வருவதை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...