உருமாறிய கொரோனா எதிரொலி: கோவை விமான நிலையத்தில் கண்காணிப்பு மையம் துவக்கம்

நாளை முதல் கண்காணிப்பு நெறிமுறைகளை செயல்பாட்டிற்கு கொண்டு வர மத்திய அரசு அறிவுறுத்திய நிலையில், இன்று முதலே கோவை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை கண்காணிக்கும் பணி துவங்கியது.



கோவை: சீனாவில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதையடுத்து, இந்தியாவில் பரவலைத் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர். அதன்படி, அனைத்து விமான நிலையங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சமீபத்தில் மத்திய சுகதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அதில், இந்தியா வரும் சர்வதேச விமான பயணிகள் அனைவரும் முறையாக தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும், முககவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் போன்ற நெறிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்தியாவில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களின் நுழைவாயில்களில் பயணிகளுக்கு தெர்மல் ஸ்கிரீனிங் செய்ய வேண்டும் என்றும் 2% சதவீத பயணிகளுக்கு ரேண்டம் முறையில் கொரோனா பரிசோதனை செய்யவும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.



அதன்படி, கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் கண்காணிப்பு மற்றும் பரிசோதனை செய்யும் மையம் இன்று முதல் துவக்கப்பட்டுள்ளது. கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு காலை ஏர் அரேபியா மற்றும் மாலை சிங்கப்பூர் விமானம் என இரண்டு சர்வதேச விமானங்கள் இயக்கப்படுகிறது.



நாளை 24 ஆம் தேதி முதல் கண்காணிப்பு நெறிமுறைகளை செயல்பாட்டிற்கு கொண்டு வர மத்திய அரசு அறிவுறுத்திய நிலையில், இன்று முதலே கோவை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை கண்காணிக்கும் பணி துவங்கியது.



அதன்படி, ஏர் அரேபியா விமானம் மூலம் வந்த பயணிகள் தெர்மல் ஸ்க்ரீனிங் மூலம் உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட்டது. மேலும், விமான நிலையம் வரும் அனைத்து பயணிகளும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச விமான நிலையம் வந்தடையும் பயணிகளுக்கு 2 சதவீதம் ரேண்டம் (random testing) அடிப்படையில், கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...