தொடர் விடுமுறையால் உதகைக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள் - தாவரவியல் பூங்காவை கண்டு ரசிக்க ஆர்வம்

காலாண்டு விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் என தொடர் விடுமுறை காரணமாக உதகைக்கு தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநில சுற்றுலா பயணிகள் வருகையால், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் களைகட்டியுள்ளன.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை ஆண்டுக்கு சுமார் 30 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து கண்டு ரசித்து செல்கின்றனர். குறிப்பாக வார நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை என்பது குறைவாக காணப்பட்டாலும் தொடர் விடுமுறை காலங்களில் அதிகமான சுற்றுலா பயணிகள் வரத்து காணப்படும்.

இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள பள்ளிகள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை கிறிஸ்துமஸ் பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளது.



இதனால் தொடர் விடுமுறை கிடைத்துள்ளதால் தமிழகத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி பல்வேறு வெளி மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் என ஆயிரக்கணக்கானோர் உதகைக்கு வரத் தொடங்கியுள்ளனர்.



அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் உதகை தாவரவியல் பூங்காவை சுற்றி பார்க்க அதிக ஆர்வம் காட்டுவதால் பூங்காவில் இன்று காலை முதலே கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக தற்போது குளிர் காலம் என்பதால் பூங்காவில் மலர்கள் இல்லாவிட்டாலும் குளிர்ச்சியான காலநிலையில் பூங்காவை ஆர்வத்துடன் கண்டு ரசித்து செல்கின்றனர்.



இதே போல ரோஜா பூங்கா மற்றும் படகு இல்லம் போன்ற பகுதிகளில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...