கோவையில் மோப்ப நாய்களுக்கு 6 மாத கால சிறப்பு பயிற்சி - நாமக்கல் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது..!

வெடிகுண்டு மற்றும் குற்றவாளிகளை கண்டறியும் 6 மாதம் பயிற்சி முடித்த நிலா, டயானா, ஸ்டெஃபி என்ற மூன்று மோப்ப நாய்களும், காவல் ஆணையாளரின் உத்தரவின்படி நாமக்கல் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.



கோவை: தமிழ்நாடு காவல்துறை பிரிவில் மோப்ப நாய்களின் பங்கு அளப்பறியது என்றால் அது மிகையாகாது. குறிப்பாக குற்ற பின்னணியில் உள்ள நபர்களை கைது செய்ய சின்ன தடயம் கிடைத்தாலும், மோப்ப நாய்களை கொண்டு எளிதில் அவர்களை கண்டுபிடிக்கலாம்.

அதுமட்டுமின்றி வெடிகுண்டு கண்டறிதல், கஞ்சா போன்ற போதை பொருட்களை கண்டறிதல், குற்றவாளிகளை பின் தொடர என மோப்ப நாய்கள் போலீசாருக்கு பெருமளவில் உறுதுணையாக இருந்து வருகிறது.

அவ்வாறான மோப்ப நாய்கள் முறையான பயிற்சி மூலம் செயல்முறைக்காக தயார்படுத்தப்படுகின்றன. இதற்காக, கோவையில் போலீஸ் மோப்பநாய்களுக்கு பயிற்சி அளிக்கும் தனிப்பிரிவு செயல்படுகிறது.

அந்த வகையில், கோவையில் 6 மாதம் பயிற்சி முடித்த 3 மோப்ப நாய்கள் நாமக்கல் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 3 மோப்ப நாய்களுக்கு 6 மாதங்களாக பயிற்சியானது அளிக்கப்பட்டது.

நிலா, டயானா என்று பெயரிடப்பட்ட இந்த இரு நாய்களுக்கும் வெடிகுண்டு கண்டறிய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஸ்டெபி என்று பெயரிடப்பட்ட மோப்ப நாய் குற்றவாளிகளை கண்டறிவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த மூன்று நாய்களுக்கும் சிறப்பு பயிற்சி நிறைவு பெற்ற நிலையில், அவற்றுக்கு அளிக்கப்பட்ட பயிற்சிகள் குறித்து காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கேட்டறிந்தார்.

இதையடுத்து, ஆணையரின் உத்தரவின்படி நிலா, டயானா மற்றும் ஸ்டெபி நாமக்கல் மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Newsletter

கோவை பீளமேடு பள்ளியில் போதை எதிர்ப்பு மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்தில் உள்ள பீளமேடு தொடக்கப்பள்ளியில் போதைப்பொருள் தீமைகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்...

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...