கோவை மாவட்ட மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகளை வழங்கிய ஆட்சியர் சமீரன்

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகள் வழங்கும் நிகழ்வை முதலமைச்சர் தொடங்கி வைத்த நிலையில், கோவையில் ஆட்சியர் சமீரன், 893 சுய உதவி குழுக்களுக்கு ரூ.58 கோடி மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார்.


கோவை: மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் உதவிகள் வழங்கும் விழா திருச்சியில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் உதவிகளை வழங்கினார்.



மேலும் அந்த நிகழ்ச்சியில் மணிமேகலை விருதுகள் மாநில அளவிலான வங்கியாளர் விருதுகள் முதல்வரால் வழங்கப்பட்டு, பல்வேறு புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. மேலும் முடிவுற்ற திட்டப் பணிகள் துவக்கி வைக்கப்பட்டன.



இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் 893 சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கப்பட்டது.



இந்நிகழ்வு கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கலை அரங்கத்தில் நடைபெற்றது.



இதில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவிகளை வழங்கினார்.

அதன்படி, சுய உதவிக் குழுக்களுக்கான வங்கி கடன், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கான வங்கி பெருங்கடன், சுய வேலைவாய்ப்பு திட்டம், சமுதாயத்திறன் பள்ளிகள் அமைப்பதற்கு நிதி, சமுதாயப் பண்ணை பள்ளிகள் அமைப்பதற்கான நிதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக 893 சுய உதவி குழுக்களுக்கு 58.004 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் 2704 பயனாளிகள் பயன் பெற்றனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...