கோவை ஈஷாவில் யோகா பயிற்சிக்கு சென்று மாயமான பெண் கிணற்றில் சடலமாக மீட்பு..!

கோவை ஈஷா மையத்திற்கு பயிற்சிக்காக சென்ற பெண் மாயமான வழக்கில், 14 நாட்களுக்கு பிறகு பெண்ணின் சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட நிலையில், போலீசார் கொலையா, தற்கொலையா என போலீசார் விசாரணை.



கோவை: திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்தவர்கள் பழனிகுமார் - சுபஸ்ரீ தம்பதி. இவர்கள் இருவரும் திருப்பூரில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர். இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.

இந்நிலையில், சுபஶ்ரீ கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சைலன்ஸ் என்ற யோகா பயிற்சிக்காக கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு சென்று பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

இதனை தொடர்ந்து மற்றொரு பயிற்சிக்காக கடந்த டிசம்பர் 11ஆம் தேதி கோவை ஈஷா யோகா மையத்துக்கு சென்றுள்ளார். இந்நிலையில், அவரது கணவர் காலை 6 மணியளவில் ஈஷா மையத்திற்கு கொண்டு சென்று விட்டுள்ளார்.

இந்நிலையில், டிசம்பர் 18ஆம் தேதியுடன் இந்த பயிற்சி முடிவடைந்த நிலையில் அவரை அழைத்து செல்ல கணவர் பழனிகுமார் ஈஷா யோகா மையத்துக்கு வந்துள்ளார். இதற்காக காலை 6 மணிக்கே வந்து காத்திருத்த அவர், 11 மணி ஆகியும் சுபஶ்ரீ வராத நிலையில், செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார்.

ஆனால் அவருக்கு அழைப்பு செல்லாத நிலையில், ஈஷா யோகா மையத்தினர் காலையிலேயே பயிற்சி முடிந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது காலையிலேயே ஈஷா யோகா மையத்தின் மற்றொரு கேட் வழியே வெளியேறிய சுபஶ்ரீ, கால் டாக்ஸியில் லிப்ட் கேட்டு செம்மேடு பகுதிக்கு சென்றது தெரியவந்தது.

வேறொரு எண்ணில் இருந்து தனக்கு வந்த அழைப்பை பழனிக்குமார் தொடர்பு கொண்டபோது, “என் கணவரிடம் பேச வேண்டும் என பெண் ஒருவர் சொல்லிவிட்டு, அழைப்பை எடுக்கவில்லை எனக் கூறி சென்றுவிட்டார்” என அந்த எண்ணில் பேசிய நபர் கூறியுள்ளார்.

இதன் பின்னர் சுபஶ்ரீயை தொடர்பு கொள்ள முடியாத நிலையில், பழனிக்குமார், மனைவி சுபஶ்ரீ மாயமானது குறித்து ஆலாந்துறை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

பயிற்சியின்போது கையில் செல்போன் மற்றும் உடமைகளுடன் சென்றிருந்த சுபஶ்ரீ, பயிற்சிக்கு பின் வெளியே வரும்போது கையில் எதுவும் இல்லாமல் வெள்ளை நிறை உடை அணிந்து சாலையில் ஓடுவது போல் இருக்கும் சுபஶ்ரீயை கண்டுபிடிக்க 6 காவல் ஆய்வாளர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

மேலும், அவரது புகைப்படம் அனைத்து பேருந்து நிலையம், ரயில் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை செம்மேடு காந்திநகர் அருகே உள்ள கிணற்றில் ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக காவல் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.



இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், தீயணைப்பு படையினர் உதவியுடன் உடலை மீட்டனர். இறந்தது சுபஸ்ரீ தான் என அவரது கணவர் மோதிரம் மற்றும் ஈஷாவின் அடையாளம் அவரது கையில் அணிந்திருந்ததை வைத்து உறுதிப்படுத்தினர்.

சுபஸ்ரீயின் உடல் மீட்டு, காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுபஸ்ரீ தற்கொலையா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்காக சென்ற பெண் மாயமான வழக்கில், திடீர் திருப்பமாக பெண்ணின் உடல் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....