புத்தாண்டில் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும் -கோவை மாவட்ட தொழில்துறையினர் நம்பிக்கை

அமெரிக்க ஆயத்த ஆடை சந்தை திருப்தி அளிப்பதாகவும், சீனாவில் ஏற்பட்டுள்ள தொற்று பாதிப்பால் சகஜ நிலைக்கு திரும்ப 3 மாதங்களாகும் என்பதால், சீனாவுக்கான பெரும்பாலான பணி ஆணைகள் இந்தியாவுக்கு கிடைக்கும் என கருத்து.


கோவை: ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில் தொழில்துறை சிறப்பான வளர்ச்சியை பெறும் என நம்புவதாக தொழில்துறையினர் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் (கொடிசியா) தலைவர் திருஞானம் கூறியதாவது, புத்தாண்டில் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். அனைத்து தொழில்களும் வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணிக்கும் என நம்புகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதேபோல், இந்திய தொழில் முனைவோர் சங்கத்தின் தேசிய தலைவர் ரகுநாதன் கூறியதாவது, இந்த ஆண்டு எத்தனை சோதனைகள் வந்தாலும், அவற்றை எதிர்த்து போராடி தொழில் முனைவோர் அனைவரும் வெற்றி பெற வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் பேசினார்.

கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில் முனைவோர் சங்கத்தின் (காட்மா) தலைவர் சிவக்குமார் கூறியதாவது, மத்திய அரசு சார்பில் பொதுத்துறை நிறுவனத்தை கோவையில் அமைக்க வேண்டும்.

தமிழக அரசு குறுந்தொழில் வளர்ச்சி வங்கி தொடங்க வேண்டும். சொத்து வரி மற்றும் மின்கட்டண உயர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கோவை வெட் கிரைண்டர் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (கவுமா) முன்னாள் தலைவர் சாஸ்தா எம்.ராஜா கூறியதாவது, புத்தாண்டின் முதல் மூன்று மாதங்களில் அதிக சவால்கள் காத்திருக்கும்.

தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இழப்பைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து, தொழில் நிறுவனங்கள் ஊதியம் வழங்குவதில் சிறிது பங்களிப்பு செய்யும் வகையில் சிறப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்திய ஜவுளி தொழில் முனைவோர் கூட்டமைப்பு (ஐடிஎப்) கன்வீனர் பிரபு தாமோதரன் கூறியதாவது, இரண்டு அம்சங்கள் புத்தாண்டில் நம்பிக்கை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன.

அமெரிக்க ஆயத்த ஆடை சந்தை திருப்தியளிக்கும் வகையில் உள்ளது. சீனாவில் தற்போது நிலவும் நோய்தொற்று பாதிப்பு காரணமாக சகஜ நிலைக்கு திரும்ப குறைந்தது 3 மாதங்களாவது ஆகும். இதனால் இந்திய தொழில் நிறுவனங்கள் பயன்பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வார்ப்பட தொழில் தேசிய அமைப்பான இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியன் பவுண்டரி மென் (ஐஐஎப்) தென்மண்டல தலைவர் முத்துகுமார் கூறியதாவது, கடந்தாண்டு அக்டோபர் வரை டிராக்டர் விற்பனை 17.28 சதவீத வளர்ச்சியையும், ஆட்டோமொபைல் துறை 11 சதவீத வளர்ச்சியையும் பதிவு செய்தன.

இதனால் வார்ப்பட தொழிற்சாலைகள் பயன்பெற்றன. எதிர்வரும் நாட்களில் சீனாவுக்கான பெரும்பாலான பணி ஆணைகள் இந்தியாவுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கேற்ப மத்திய, மாநில அரசு உதவ வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கொங்கு குளோபல் போரம் (கேஜிஎப்) இயக்குனர் நந்தகுமார் கூறியதாவது, 2023 ஆம் ஆண்டு கோவை விமான நிலைய விரிவாக்கத் திட்டம் செயல்பட தொடங்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. கோவை - துபாய் உள்ளிட்ட வெளிநாடு மற்றும் உள்நாட்டு பிரிவில் புதிய விமான சேவை புத்தாண்டில் தொடங்க அதிக வாய்ப்பு உள்ளது,

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் (டாக்ட்) மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறியதாவது, புத்தாண்டில் மத்திய, மாநில அரசு குறுந்தொழில் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள போதும், அவற்றை எதிர்த்து போராடி வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது,

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவாக செந்தில்பாலாஜி பதவியேற்பு

தமிழகத்தின் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற...

தொண்டாமுத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக எஸ்.பி.வேலுமணி பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் தொண்டாமுத்தூர் தொகுதியில் AIADMK சார்பில் வெற்றி பெற்ற எஸ்.பி.வேலுமணி சட்டப்...

கோயமுத்தூரில் அணைகளின் நீர்மட்டம் உயர்வு: தொடர் மழை வரத்தால் நீர் வெளியேற்றம்

கோயமுத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி மற்றும் திரு...

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...