சுபஸ்ரீ மரணம் தொடர்பாக விசாரிக்க விசாரணை குழு அமைக்க வேண்டும் - கோவையில் பி.ஆர்.நடராஜன் எம்.பி.

சுபஸ்ரீ மரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி கோவையில் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் மார்க்சிய, அம்பேத்கரிய, பெரியாரிய அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு கடந்த டிசம்பர் மாதம் பயிற்சிக்காக வந்த திருப்பூர் மாவட்டத்தை சார்ந்த சுபஸ்ரீ என்ற பெண் அங்கிருந்து வெளியேறி மாயமான நிலையில், நேற்று இருட்டு பள்ளம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

இது குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த சுபஸ்ரீ யின் கணவர் பழனிக்குமார் இறந்து கிடப்பது சுபஸ்ரீ தான் என்பதை உறுதி செய்தார். இதனை அடுத்து சுபஸ்ரீ யின் உடலானது கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டது.



இந்நிலையில் சுபஸ்ரீயின் மரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிய, அம்பேத்கரிய, பெரியாரிய அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சுபஸ்ரீயின் மரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.



இந்த ஆர்ப்பாட்டத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, சுபஸ்ரீயின் உடல் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட நிலையில் உடனடியாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆனால் அவர்களது குடும்ப வழக்கத்திற்கு மாறாக சுபஸ்ரீ என் உடல் எரியூட்டப்பட்டது. இது கோவை மக்களிடையே மிக பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈஷாவில் தொடர்ந்து இதுபோன்று மர்ம மரணங்கள் நடைபெற்று வருகிறது.

எனவே தமிழக அரசு இது குறித்து ஈஷாவை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். சுபஸ்ரீயின் மரணம் குறித்து விசாரிக்க மாநில அரசு விசாரணை குழுவை அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...