கோவை கிணத்துக்கடவு அருகே தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் - 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசு மக்கள் மீது பாரத்தை போடாமல் உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.


கோவை: தமிழகத்தில் சொத்து வரி, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதன் ஒரு பகுதியாக கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம் முன்பு கோவை நகர அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



நகர செயலாளர் மூர்த்தி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மலுமிச்சம்பட்டி ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் டி.எல்.சிங் அனைவரையும் வரவேற்றார்.



இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் மின் கட்டண உயர்வு சொத்து உயர்வு பால் உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.



அப்போது, தமிழக அரசு மக்கள் மீது பாரத்தை போடாமல் உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுக்கரை நகர செயலாளர் சண்முகராஜா, மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜேம்ஸ் ராஜா, மாவட்ட மகளிர் அணி செயலாளர் கண்ணம்மாள், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய தலைவர் நாகராணி மற்றும் லட்சுமணன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...