தமிழக அரசின் பொங்கல் தொகுப்பில் 2 தேங்காய்கள் வழங்க வேண்டும் - கோவையில் பா.ஜ.க விவசாயிகள் அணி தலைவர் ஜி.கே.நாகராஜ்

தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தி வரும் 5 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு பாஜக சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என ஜி.கே.நாகராஜ் கூறியுள்ளார்.



கோவை: கோவை மாவட்டம் காந்திபுரம் வி.கே.கே மேனன் சாலையில் உள்ள பாஜக அலுவலகத்தில் பா.ஜ.க விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே நாகராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,



வரும் ஜனவரி 5ஆம் தேதி தமிழகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு, அனுமதிக்கப்பட்ட இடங்களில் பொதுமக்களுக்கு இலவசமாக தேங்காய் வழங்கி தென்னை விவசாயத்தை காப்பாற்ற கோரி தென்னங் கன்றுகளுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

ஒவ்வொரு ஆர்ப்பாட்டக் களத்திலும் 4,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இலவச தேங்காய் கொடுத்து தேங்காய் உண்பதால் ஏற்படும் நன்மைகளை விளக்கி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்படவுள்ளது.

தமிழகத்தில் விளையும் முக்கிய உணவுப் பொருளான தேங்காய் கடந்த ஒரு வருடமாக தமிழக அரசின் முறையற்ற நிர்வாகத்தால் விலை மிகவும் குறைந்து கோடிக்கணக்கான தேங்காய்கள் தோப்பில் தேங்கி கிடக்கின்றன.

மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதார விலையான கொப்பரை தேங்காய்க்கு ரூ.108.65 வழங்கப்பட்டும், அதிமுக ஆட்சி காலத்தில் கிலோ ரூ.110க்கு விற்ற கொப்பரை தேங்காய் தற்போது திமுக ஆட்சி காலத்தில் ரூ.80 க்கு குறைந்தது. கடும் விலை சரிவால் விவசாயிகள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.



இதன் காரணமாக தென்னை விவசாயிகள் வாழ்வாதாரத்தை காக்கும் விதமாக தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில் ஒரு குடும்ப அட்டைக்கு இரண்டு தேங்காய்கள் வழங்க வேண்டும்.

அவ்வாறு வழங்கும் பட்சத்தில், 2 கோடியே 20 லட்சத்து 40 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கான தேங்காய்கள் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படும். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்கப்படும்.

இதேபோல், பள்ளி சிறுவர் - சிறுமியர்களுக்கு மதிய சத்துணவுடன் சேர்த்து தேங்காய் சீவல் அல்லது தேங்காய்ப்பாலை வழங்கினால், தாய்ப்பாலுக்கு இணையான மோனோலாரி சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

Tragedy in Tiruppur: Conductor Sleeping in Front of Bus Run Over, Killed

A 23-year-old bus conductor was killed in a tragic accident in Tiruppur after a private bus driver allegedly failed to n...

திருப்பூரில் பரிதாபம்: பேருந்து முன்பாக படுத்திருந்ததை கவனிக்காத ஓட்டுனர் – நடத்துனர் பலி.

திருப்பூரில் பேருந்தின் முன்பாக படுத்து உறங்கியிருந்த இளம் நடத்துனர் சூர்யா (23) மீது, ஓட்டுனர் கவனிக்காமல் பேருந்தை இயக...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...