கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்தாய்வு நடைபெற்றது. குடிநீர், சாலை, சுகாதாரம், தெருவிளக்கு பணிகளில் மக்கள் குறைகளுக்கு உடனடி தீர்வு காண அறிவுறுத்தப்பட்டது. அமைச்சர் சீரநாயக்கன்பாளையம், தொண்டாமுத்தூர் பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார்.


Coimbatore: தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, கோயம்புத்தூர் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இன்று (27.06.2026) நடைபெற்றது.



கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநகராட்சியின் 5 மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த விரிவான ஆய்வு இக்கூட்டத்தில் நடைபெற்றது.



கூட்டத்தில் பேசிய அமைச்சர் வி.சம்பத்குமார், குடிநீர் திட்டப் பணிகள், சாலை பணிகள், சுகாதார தூய்மை பணிகள் மற்றும் தெருவிளக்குகள் சம்பந்தமாக பொதுமக்கள் தெரிவிக்கும் குறைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தினார். அடிப்படை வசதிகளான இவற்றில் குறைகள் ஏதுமின்றி சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பணியாற்றிட வேண்டும் என்றும் தெரிவித்தார்.



26.06.2026 அன்று மேற்கு மண்டலம், வார்டு எண் 75-க்கு உட்பட்ட சீரநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள வாய்க்காலில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை அமைச்சர் திடீர் ஆய்வு செய்து, சரிசெய்திட அறிவுறுத்தினார். பின்னர், வார்டு எண் 40-க்குட்பட்ட தொண்டாமுத்தூர் சாலை, வீரகேரளம் பகுதியில் கிருஷ்ணம்பதி குளத்திற்கு செல்லும் வாய்க்கால் பகுதியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இக்கூட்டத்தில், மாநகராட்சி துணை ஆணையாளர்கள் த.குமரேசன், ர.சரஸ்வதி, மாநகர தலைமை பொறியாளர் விஜயகுமார், நகர் நல அலுவலர் Dr.சுபாஷ் காந்தி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...