நீலகிரி உதகையில் நடைபெற்ற கோத்தர் இன மக்களின் குலதெய்வ பண்டிகை - பாரம்பரிய இசை, நடனத்துடன் நிறைவு

உதகை அடுத்த கோக்கால் கிராமத்தில் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்த கோத்தர் இன மக்களின் குலதெய்வ பண்டிகையின் இறுதியில் பாரம்பரிய இசையுடன் அரங்கேறிய ‘ஆட்குப்ஸ்’ நடனம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அருகேயுள்ள கோக்கால் கிராமத்தில் கோத்தர் இனத்தை சேர்ந்த 120 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்கள் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களது குல தெய்வமான அய்யனோர், அம்மனோர் கோவில் திருவிழாவை கொண்டாடுவது வழக்கம்.

இந்த நிகழ்விற்கு முன்னதாக அந்த கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளில் இறந்தவர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டும் நடத்தப்படும் வர சாவு நிகழ்ச்சியை நடத்தினர்.

இதனை தொடர்ந்து கடந்த 23ஆம் தேதி முதல் தங்களது கிராமத்திற்குள் வெளியாட்களை அனுமதிக்காமல், விரதம் இருந்து தினந்தோறும் பல்வேறு சடங்குகளை கடைபிடித்து அய்யனோர், அம்மனோர் பண்டிகைக்கு ஏற்பாடு செய்தனர்.

இதையடுத்து, கடந்த 27ஆம் தேதி வழிபாடு செய்வதற்கு புதுப் பானை தயாரிக்க களிமண் எடுத்து வரும் நிகழ்வு நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் களிமண்ணை தலை மீது சுமந்து சென்று, தங்கள் வீடுகளில் புது பானைகள், தட்டுகளை தயாரித்தனர்.

இந்நிலையில் புத்தாண்டன்று, சாமை அரிசி, அவரை மற்றும் நெய் ஆகியவற்றால் உணவு தயாரித்து குலதெய்வங்களுக்கு படைத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.



அப்போது, கிராமத்தின் மைய பகுதியில் பாரம்பரிய உடைகள் மற்றும் அணிகலன்கள் அணிந்து ஒன்று திரண்ட கோத்தர் இன மக்கள், தங்களது கலாச்சார இசையுடன் உற்சாகமாக நடனமாடினர்.



மேலும், 10 நாட்கள் நடைபெற்ற இந்த குல தெய்வ பண்டிகையின் இறுதியாக ஆண்கள் ராஜாக்களை போல தலைபாகையுடன் வேடமிட்டு ஆட்குப்ஸ் என்ற நடனம் அரங்கேற்றியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...