திருப்பூர் பல்லடத்தில் ரூ.2 லட்சம் கடனுக்காக வீட்டை ஜப்தி செய்ய முயன்ற தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் - பரபரப்பு..!

பல்லடம் அடுத்த மங்கலம் ரோடு பகுதியில், ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், வாங்கிய ரூ.2 லட்சம் கடனுக்காக வீட்டை தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் ஜப்தி செய்ய முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த மங்கலம் ரோடு பகுதியை சேர்ந்தவர் ரகுமான் (52). ஆட்டோ ஓட்டுனரான இவர், பல்லடத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் ரூ.2 லட்சம் கடன் பெற்றுள்ளார்.

அதற்கான தவணையை ஆறு மாதங்கள் மட்டும் செலுத்திய நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக, தவணை செலுத்த இயலவில்லை என்று கூறப்படுகிறது.



இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் படி தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்வதற்காக ரகுமானின் வீட்டுக்கு வந்துள்ளார்.



அப்போது, ரஹ்மான் மற்றும் அவரது குடும்பத்தினர் ஜப்தி நடவடிக்கை வேண்டாம் என்றும், கால அவகாசம் வழங்குமாறு நிதி நிறுவன ஊழியர்களிடம் வலியுறுத்தினர். அதை பொருட்படுத்தாமல், ஊழியர்கள் ஜப்தி நடவடிக்கையை தொடர்ந்த நிலையில், கால அவகாசம் வழங்குமாறு அக்கம்பக்கத்தினர் ரகுமான் குடும்பத்தினருக்கு ஆதரவாக பேசியதை அடுத்து ஜப்தி நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டது.

இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...