ஒப்பந்த செவிலியர்கள் பணி நீக்கத்தை கண்டித்து கோவையில் கருப்பு பட்டை அணிந்து பணி செய்த செவிலியர்கள்

கொரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து கோவையில் 200 க்கும் மேற்பட்ட எம்.ஆர்.பி செவிலியர்கள் கருப்பு பட்டை அணிந்தபடி பணி செய்தனர்.


கோவை: கொரோனா தொற்று பரவலின் போது, மருத்துவப் பணிகள் தேர்வாணையத்தின் மூலம் 3,200 செவிலியர்கள், அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். கொரோனா அச்சுறுத்தல் நீடித்ததால் அரசின் கோரிக்கைக்கு இணங்க தொடர்ந்து செவிலியர்களை பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஜனவரி 1 ஆம் தேதியுடன் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள், பணி நீக்கம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதனை பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்த்த நிலையில் இரண்டு தினங்களாக ஒப்பந்த செவிலியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.



இதன் தொடர்ச்சியாக, அவர்களுக்கு ஆதரவு தரும் விதமாக, செவிலியர்கள் பணி நீக்கத்தை எதிர்த்து தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர் மேம்பாட்டு சங்கம் சார்பாக செவிலியர்கள் தமிழகம் முழுவதும் கருப்பு பட்டை அணிந்தபடி பணியில் ஈடுபட்டனர்.



இதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள சுமார் 200 எம்.ஆர்.பி. செவிலியர்கள் கருப்பு பட்டை அணிந்தபடி பணிகளை மேற்கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...